மேலும் அறிய

பரிதாபம்! திருமணத்திற்கு சில மணிநேரம் முன்பு கடித்த பாம்பு! பறிபோன மாப்பிள்ளை உயிர்!

உத்தரபிரதேசத்தில் திருமணம் நடக்க சில மணி நேரம் இருந்த நிலையில், மணமகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அந்த பகுதி முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது புலந்த்ஷர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது அகர்பஸ் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் ப்ரவேஷ்குமார். இவருக்கு வயது 26. திருமண வயதை எட்டிய இவருக்கு கடந்த சில மாதங்களாக மணமகள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் மணமகள் அமைந்துள்ளது.

பாம்பு கடி:

இதையடுத்து, ப்ரவேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, திருமணம் நடக்க சில மணி நேரம் இருந்த நிலையில், மணமகன் ப்ரவேஷ்குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவரது கிராமத்தில் இருந்த புதர் அருகே சென்றுள்ளார்.

திருமண பணியில் அனைவரும் பரபரப்பாக இருந்த சூழலில், மணமகன் ப்ரவேஷ்குமாரை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. இதனால், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள புதர் ஒன்றில் ப்ரவேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

பரிதாபமாக உயிரிழந்த மணமகன்:

இதைக்கண்ட குடும்பத்தினரும், உறவினர்களும் பதற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து, ப்ரவேஷ்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனால், உற்சாகமாக காணப்பட்ட திருமண வீடு சோகமாக மாறியது. மணமகன் ப்ரவேஷ்குமார் பாம்பு கடித்து உயிரிழந்த தகவல் அறிந்த மணமகள் குடும்பத்தினரும் பெரும் சோகம் அடைந்தனர்.

திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, மணமகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை மணமகன் கிராமத்திலும், மணமகள் கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளது. ப்ரவேஷ்குமார் உயிரிழந்த புலந்த்ஷர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் 7 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாவட்ட மூத்த மருத்துவர், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பாம்புகடிகளுக்கு உரிய மருந்துகளும் கைவசம் இருக்கிறது என்றும், மழைக்காலங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: Video: கூலருக்கு அருகில் அமர்வதில் சண்டை: கடைசியில் கல்யாணமே நிறுத்திட்டாங்க..! எங்கு? என்ன நடந்தது?

மேலும் படிக்க:லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும்.. பகீர் கிளப்பும் பொது சிவில் சட்டம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
Embed widget