மேலும் அறிய

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் கோதாவரி ஆற்றில் ஐந்து இளைஞர்கள், புனித நீராடும்போது மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில் நகரமான பாசரில் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மரணம்:

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ஹைதராபாத்தில் உள்ள சிந்தால் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 18 பேர், சரஸ்வதி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் பாசருக்குச் சென்றிருக்கின்றனர்.

ஆற்றங்கரையில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நீச்சல் வீரர்களின் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஓட்டம் அதிகரித்தது. இறந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பாரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். உடல்கள் பைன்சாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்:

கோதாவரி ஆற்றில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த செய்தி தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீர்நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் மக்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் ஆழம் குறித்து மக்களை எச்சரிக்கும் பலகைகளை நிறுவவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொண்டபோச்சம்மா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாகவும் பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணையில் ஆறு இளைஞர்கள் மூழ்கி இறந்ததாக அமைச்சர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
ஆதார் கார்டில் Email ID அப்டேட் செய்ய இனி கட்டணம் இல்லை.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!
ஆதார் கார்டில் Email ID அப்டேட் செய்ய இனி கட்டணம் இல்லை.. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget