மேலும் அறிய

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் கோதாவரி ஆற்றில் ஐந்து இளைஞர்கள், புனித நீராடும்போது மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில் நகரமான பாசரில் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மரணம்:

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ஹைதராபாத்தில் உள்ள சிந்தால் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 18 பேர், சரஸ்வதி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் பாசருக்குச் சென்றிருக்கின்றனர்.

ஆற்றங்கரையில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நீச்சல் வீரர்களின் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஓட்டம் அதிகரித்தது. இறந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பாரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். உடல்கள் பைன்சாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்:

கோதாவரி ஆற்றில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த செய்தி தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீர்நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் மக்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் ஆழம் குறித்து மக்களை எச்சரிக்கும் பலகைகளை நிறுவவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொண்டபோச்சம்மா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாகவும் பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணையில் ஆறு இளைஞர்கள் மூழ்கி இறந்ததாக அமைச்சர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget