"சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது.. கீழ் ஆடையை கழற்றுவது பாலியல் வன்கொடுமை ஆகாது" கோர்ட் பரபர
சிறுமியின் கீழ் ஆடையை கழற்றுவதோ, மார்பகத்தை பிடிப்பதோ, பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது. பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததாகக் கூற முடியாது என நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மார்பகத்தை பிடிப்பதோ, பைஜாமாவில் இருக்கும் நாடாவை கழற்றுவதோ, பாலத்தின் கீழ் இழுத்து செல்வதோ பாலியல் வன்கொடுமை ஆகாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதனை மோசமான பாலியல் தாக்குதல் சம்பவம் என குறிப்பிடலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றச் செயல்கள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இவற்றை தடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரியான சூழலில், பாலியல் குற்றங்கள் குறித்து நீதிமன்றங்கள் சமீப காலமாக தெரிவிக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அம்மாதிரியான கருத்து ஒன்றைதான் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. சிறுமியின் மார்பகத்தை பிடிப்பதோ, பைஜாமாவை கழற்றுவதோ, பாலத்தின் கீழ் இழுத்து செல்வதோ, பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது. பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததாகக் கூற முடியாது என நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
உத்தரப் பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்சில் 11 வயது சிறுமியின் மார்பகத்தை பிடித்து, அவர் போட்டிருந்த பைஜாமாவின் நாடாவுக்கு சேதம் விளைவித்ததாக இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அச்சிறுமியை பாலத்தின் கீழ் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்தது. சாலையில் நின்றிருந்த சிறுமிக்கு லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி இப்படி செய்துள்ளனர். அந்த பகுதியில் இருந்த உள்ளூர்வாசிகள், குற்றவாளிகளின் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கஸ்கஞ் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பவன் மற்றும் ஆகாஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376, போக்சோ சட்டம் பிரிவு 18 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி பரபர கருத்த:
கஸ்கஞ் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களைப் பிடித்தது, கீழ் ஆடையை கீழே இறக்க முயன்றது, கீழ் ஆடையின் நாடாவுக்கு சேதம் விளைவித்தது, பாலத்திற்கு அடியில் இழுத்துச் செல்ல முயன்றது என பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், உள்ளூர்வாசிகளின் தலையீட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த குற்றச்சாட்டுகள் மூலம், பாதிக்கப்பட்ட சிறுமியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்ற அனுமானத்திற்கு வர முடியவில்லை. ஏனெனில், இதை தவிர, அவர்களின் வேறு செயல்கள் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர் என்பதை நிறுவவில்லை" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

