மேலும் அறிய

'ஆடம்பர வாழ்க்கை வாழனும்' அதுக்கு ஆடு திருடனும்; போலீசிடம் வசமாக சிக்கிய கும்பல்

திண்டிவனம் அருகே காரில் ஆடுகளை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கியதால் காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே காரில் ஆடுகளை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கியதால் காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் பாலா(51) சொந்தமாக 8 பசுமாடுகள் மற்றும் 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வெளியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது 5 ஆடுகளை நேற்று காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்தனர். அப்போது அதைக் கண்ட விவசாயி பாலா கத்தி கூச்சலிட்டதில் பொதுமக்கள் அந்த காரை சூழ்ந்து மடக்கினர்.

இதில் காரை அப்படியே விட்டுவிட்டு திருடர்கள் தப்பி சென்ற நிலையில் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை செய்ததில் ஊமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி (45), காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லோகன் மகன் சரத்குமார்(34), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் வெற்றி (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கு திட்டமிட்டு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகளான சென்னை  சேர்ந்த பரூக் மற்றும் ஜெயக்குமார்  ஆகியோர் 20.03.2025 ந் தேதி இரவு கைது செய்து அவர்களிடமிருந்து திருடுவதற்கு பயன்படுத்திய சொகுசு கார் -1 மற்றும் இருசக்கர வாகனம் திருடிய ஆடுகளை விற்ற பணம் ரூபாய் 60,000/- ஆடுகளை விற்ற பணத்தில் வாங்கிய தங்கமோதிரம் 4 கைப்பற்றப்பட்டுள்ளது

மேலும்  திருட்டின் மூலம் சம்பாதித்து பரூக் தனது வங்கி கணக்கில் வைத்திருந்த பணம் ரூ.2,13,514/-முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் திருட செல்லும்போது பயன்படுத்தும் கார்களின் பதிவெண்ணை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு போலியான பதிவெண்ணை மாட்டிக்கொண்டும் சந்தேகம் வராமல் இருக்க முன்பக்க சீட்டில் ஒரு பெண்ணை அமர்த்திக்கொண்டு குடும்பமாக செல்வதுபோல் சென்று திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் மீது 2020 முதல் கடலூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும், குற்றவாளியிடம் விசாரணை செய்ததில் எதிரிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யார் சுற்றியுள்ள பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் ஒரத்தி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளிலும் விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, கிளியனூர், பெரியதச்சூர், ஒலக்கூர், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் ஆடுகளை திருடியதாக விசாரணையில் தெரிவித்தனர்.

இவர்கள் ரூபாய் 8,65,000/ மதிப்புள்ள ஆடுகளை திருடியும் அந்த ஆடுகளை விற்று அந்த பணத்தை வைத்து சொகுசு கார்களை வாங்கியும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய இரண்டு கார்கள், ஒரு இரண்டு சக்கர வாகனம், 7 ஆடுகள் கைப்பற்றியும் மேலும் ஆடுகளை விற்று வங்கி கணக்கில் போட்டுள்ள வைத்துள்ள பணம் ரூ.2,13,514 ஆகியவற்றை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
இனி அக்கவுண்டுக்கே மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; என்ன தகுதி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு
இனி அக்கவுண்டுக்கே மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; என்ன தகுதி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு
Dravidian Politics: கேம்ப்ரிட்ஜில் திராவிட வரலாறு - சபரீசனின் பக்கா ஸ்கெட்ச், கருணாநிதி பெயரில் அசத்தலான திட்டம்
Dravidian Politics: கேம்ப்ரிட்ஜில் திராவிட வரலாறு - சபரீசனின் பக்கா ஸ்கெட்ச், கருணாநிதி பெயரில் அசத்தலான திட்டம்
ரேஷன் கார்டு நகல் பெற வேண்டுமா? வீட்டிலிருந்தே விண்ணப்பித்து, தபாலில் பெறுங்கள்! முழு விவரம்.
ரேஷன் கார்டு நகல் பெற வேண்டுமா? வீட்டிலிருந்தே விண்ணப்பித்து, தபாலில் பெறுங்கள்! முழு விவரம்.
Embed widget