மேலும் அறிய

BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்

BCCI Cash Prize India's victorious ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

BCCI Cash Prize India's victorious ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அனி சாம்பியன் பட்டம் வென்றது.

பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025-ஐ வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகிழ்ச்சியடைகிறது. இந்த நிதி அங்கீகாரம் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, சுமார் 125 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத்தொகையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ வாழ்த்து

அறிவிப்பில்,  "தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வெல்வது சிறப்பு வாய்ந்தது, மேலும் இந்த வெகுமதி உலக அரங்கில் இந்திய அணியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை அங்கீகரிக்கிறது. இந்த ரொக்க விருது, திரைக்குப் பின்னால் அனைவரும் செய்யும் கடின உழைப்புக்கான அங்கீகாரமாகும். ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இது எங்களுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பையாகும்.மேலும் இது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள வலுவான கிரிக்கெட் சூழலை எடுத்துக்காட்டுகிறது." என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா அபாரம்:

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமையேற்று நடத்திய சாம்பியன்ஸ் ட்ராபியில், கேப்டன் ரோகித் சர்மாவின் திறமையான மற்றும் சாதுர்யமான தலைமையின் கீழ், இந்திய அணி போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.  வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது பயணத்தை தொடங்கியது, பின்னர் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் வேகத்தைத் தொடர்ந்தது. இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியான பேட்டிங் மூலமாக, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்த்ரா தொடர் நாயகனாகவும், இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget