மேலும் அறிய

கோவை: ஐபிஎஸ், ஐஏஎஸ் பெயர்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி - காவல் துறையினர் விசாரணை

கோவை ஆட்சியர் பெயரை பயன்படுத்தியும், ஐபிஎஸ் அதிகாரியாகவும் நடித்தும் 6 இலட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (வயது 32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது உறவினர் எனவும் கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு அனுமதி பெற்று தர உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் எண் என போலியான ஒரு எண்ணை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் கோவை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தையும், பெயரையும் வாட்ஸ் அப்பில் போலியாக பயன்படுத்தி, அவரிடம் சாட் செய்து வந்துள்ளார்.


கோவை: ஐபிஎஸ், ஐஏஎஸ் பெயர்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி -  காவல் துறையினர் விசாரணை

போலியான வாட்ஸ் அப் சாட்டினை உண்மை என நம்பிய முகேஷ் குமார் புரோகித்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், நேரடியாக அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டார்கள் என்பதால் தன்னிடம் பணம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுத்து அனுமதி பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.


கோவை: ஐபிஎஸ், ஐஏஎஸ் பெயர்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி -  காவல் துறையினர் விசாரணை

இதன் பேரில் சென்னையில் இருந்து முகேஷ் குமார் புரோகித் கோவைக்கு புறப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 12ம் தேதியன்று நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை முகேஷ் குமார் புரோகித் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஒன்றரை இலட்ச ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் 13ம் தேதியன்று பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 1 லட்ச ரூபாய் பணத்தையும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கான வாடகை 50 ஆயிரம் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் என மொத்தம் சேர்த்து 6 லட்ச ரூபாய் பண செலவு செய்துள்ளார்.


கோவை: ஐபிஎஸ், ஐஏஎஸ் பெயர்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் மோசடி -  காவல் துறையினர் விசாரணை

அதன் பின்னர் ராஜகுருவை முகேஷ் குமார் புரோகித்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ராஜகுரு தன்னை ஏமாற்றி 6 இலட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது முகேஷ் குமார் புரோகித்க்கு தெரியவந்தது. இது குறித்து முகேஷ் குமார் புரோகித் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறியும், ஆட்சியர் பெயரை பயன்படுத்தியும் 6 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget