மேலும் அறிய
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு.. மேயரின் கணவருக்கு 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் !
மேயர் கணவர் பொன்வசந்திருக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

பொன்வசந்த்
Source : whats app
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி முறைகேடு மேயரின் கணவர் பொன்வசந்த்திற்கு ஆகஸ்ட் -26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்.
முறைகேடாக பாஸ்வேர்டு பயன்படுத்தல்
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி, வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ராஜினாமா
இது குறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் உமா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி, முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேயர் கணவர் கைது
இந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சிகிச்சைக்காக அனுமதி - நீதிமன்ற காவல்
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம் மற்றும் இசிஜியில் மாறுதலாக உள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொன்.வசந்த் மருத்துவமனையில், மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பொன்வசந்திருக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வரி முறைகேடு விவாகரத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம் மற்றும் இசிஜியில் மாறுதலாக உள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொன்.வசந்த் மருத்துவமனையில், மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பொன்வசந்திருக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வரி முறைகேடு விவாகரத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















