மேலும் அறிய

Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது, அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையேயான மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், ஒருவர் செய்யும்  செயலை மற்றொருவர் விமர்சிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அன்புமணி கூட்ட இருக்கும்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

ராமதாஸ் வழக்கு - மனுவில் கூறியிருப்பது என்ன.?

அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக, ராமதாசால் நியமிக்கப்பட்ட பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என்று சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி கட்சியின் விதிகளுக்கு முரணாக அன்புமணி கூட்டும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம், கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம், கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்ப்டடு, கடந்த மே மாதம் 30-ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டுவருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“அனைத்து அதிகாரமும் கட்சியின் நிறுவனருக்கே உள்ளது“

மாநில தலைவரின் பதவிக் காலம் முடிவடைந்தால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு ஆகியவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது எனவும், கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட, கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும், செயல் தலைவர் அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அன்புமணி அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு“

அதோடு, கட்சித் தலைவரும், நிறுவனருமான ராமதாஸின் அனுமதி இல்லாமல், அன்புமணி 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு எதிராக டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாகவும், அவரது இந்த அறிவிப்பால்  சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும்“

மேலும், பொறுப்பில் இல்லாத நபர்கள், விதிகளின்படி கட்சிப் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை என்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!
அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!
CM Vijay vs Udhayanidhi: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
CM Vijay vs Udhayanidhi: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget