மேலும் அறிய

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?

சென்னையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில், 2 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து செய்திகாளர்களை சந்தித்த மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு விதிப்பு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு பகல் பாராமல் போராடும் அவர்களுக்கு, அதிமுக, தவெக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களுடன், 8-ம் கட்டமாக, இன்று அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

“ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு“

அப்போது பேசிய பிரியா, பேச்சுவார்த்தையின்போது, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு எப்போதுமே உண்டு என்பதை எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்த வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், ரிப்பன் மாளிகை போராடுவதற்கான களமல்ல என்று நீதிமன்றம் தெவித்துள்ளதாகவும், அதனால், அங்கு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதோடு, போராட்டம் நடத்துவதற்கென்று மாநகராட்சியில் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறினார். மேலும், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில்தான் செயல்படும் என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் அந்த நிறுவனம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பணியில் பாதுகாப்பு இருப்பதாகவும், அதோடு சேர்த்து, தற்போது இல்லாத வகையில், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சலுகைகளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதனால், தூய்மைப் பணியாளர்கள் அந்த பணியில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து உடனடியாக ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது என்றும், அவர்கள் பணியில் சேர்ந்த உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கலாம் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget