மேலும் அறிய

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?

சென்னையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில், 2 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து செய்திகாளர்களை சந்தித்த மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு விதிப்பு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு பகல் பாராமல் போராடும் அவர்களுக்கு, அதிமுக, தவெக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களுடன், 8-ம் கட்டமாக, இன்று அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

“ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு“

அப்போது பேசிய பிரியா, பேச்சுவார்த்தையின்போது, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு எப்போதுமே உண்டு என்பதை எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்த வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், ரிப்பன் மாளிகை போராடுவதற்கான களமல்ல என்று நீதிமன்றம் தெவித்துள்ளதாகவும், அதனால், அங்கு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதோடு, போராட்டம் நடத்துவதற்கென்று மாநகராட்சியில் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறினார். மேலும், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில்தான் செயல்படும் என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் அந்த நிறுவனம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பணியில் பாதுகாப்பு இருப்பதாகவும், அதோடு சேர்த்து, தற்போது இல்லாத வகையில், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சலுகைகளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதனால், தூய்மைப் பணியாளர்கள் அந்த பணியில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து உடனடியாக ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது என்றும், அவர்கள் பணியில் சேர்ந்த உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கலாம் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
" மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ் " அதிகாரிகளின் அலட்சியம் – இளைஞர் வேதனை
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
NEET Protest : ’ரீமாண்ட் பண்ணிடுவேன்’ மாணவர்களை எச்சரித்த SI – நடந்தது என்ன ?
’ரீமாண்ட் பண்ணிடுவேன்’ மாணவர்களை எச்சரித்த SI – நடந்தது என்ன ?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget