மேலும் அறிய

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?

சென்னையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில், 2 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து செய்திகாளர்களை சந்தித்த மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு விதிப்பு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு பகல் பாராமல் போராடும் அவர்களுக்கு, அதிமுக, தவெக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களுடன், 8-ம் கட்டமாக, இன்று அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

“ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு“

அப்போது பேசிய பிரியா, பேச்சுவார்த்தையின்போது, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு எப்போதுமே உண்டு என்பதை எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்த வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், ரிப்பன் மாளிகை போராடுவதற்கான களமல்ல என்று நீதிமன்றம் தெவித்துள்ளதாகவும், அதனால், அங்கு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதோடு, போராட்டம் நடத்துவதற்கென்று மாநகராட்சியில் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறினார். மேலும், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில்தான் செயல்படும் என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் அந்த நிறுவனம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பணியில் பாதுகாப்பு இருப்பதாகவும், அதோடு சேர்த்து, தற்போது இல்லாத வகையில், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சலுகைகளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

அதனால், தூய்மைப் பணியாளர்கள் அந்த பணியில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து உடனடியாக ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது என்றும், அவர்கள் பணியில் சேர்ந்த உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கலாம் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதனின் சாதனை! கணினி அறிவியல் மையத்திற்கு பெயர் சூட்டல்
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதனின் சாதனை! கணினி அறிவியல் மையத்திற்கு பெயர் சூட்டல்
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Embed widget