மேலும் அறிய

’அதிமுகவின் தோல்விக்கு மூவர் கூட்டணியே காரணம்’ - கொந்தளிந்த எஸ்.பி.வேலுமணி

”அதிகாரிகள், போலீஸ்காரர்கள், திமுக என மூவர் கூட்டணி போட்டு மக்களை தோற்கடித்து விட்டார்கள். ஜனநாயகத்தை தோற்கடித்துள்ளார்கள்”

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கூட்டத்தை பார்த்தாலே திமுகவும், அதிமுகவும் இது ஆளும்கட்சியா, எதிர்கட்சியா என சந்தேகம் ஏற்பட்டுவிடும். தேர்தலில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றது. தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தது கோவை மாவட்ட மக்களை காப்பாற்றுகிற ஒரே கட்சி அதிமுக என்பதை நிருபித்துள்ளது. திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வழக்கம். ஸ்டாலின் ஆட்சியில் 12 வழக்குகள் உடைய கள்ள ஓட்டு போட வந்த ரவுடியை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார். போலீஸ் செய்யாத வேலையை ஜெயக்குமார் செய்தார். ஜெயக்குமாரை முடக்கும் எண்ணத்தில் கைது செயப்பட்டுள்ளார்.


’அதிமுகவின் தோல்விக்கு மூவர் கூட்டணியே காரணம்’ - கொந்தளிந்த எஸ்.பி.வேலுமணி

கோவையில் ஏராளமான அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது வெட்ககேடாக விஷயம். பணம், பரிசு, கொலுசு என போலீசை வைத்து வீசி எறிந்தார்கள். ஆனால் வழக்கு மட்டும் அதிமுகவினர் மீது போடப்படுகிறது. அதிமுகவினருக்கு பிராடு பண்ணத் தெரியாது, மெசினை மாற்ற தெரியாது. நியாயப்படி தேர்தல் நடந்திருந்தால் கோவை மாநகராட்சியில் 85 இடங்களில் அதிமுக வென்றிருக்கும். அதை மாற்றியுள்ளார்கள். தேர்தல் நாளான்று கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் எவ்வளவு ஓட்டு போடப்பட்டது. முழுமையாக விஞ்ஞான முறையில் அதிமுக ஜெயிக்கும் இடங்களை சர்வே எடுத்து, அதிமுகவிற்கு விழுந்த ஓட்டை திமுகவிற்கும், திமுகவிற்கு விழுந்த ஓட்டை அதிமுகவிற்கும் மாற்றி எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாய படுகொலை.

இதனை மீறி வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மீது வழக்கு போட்டும், குடும்பத்தையினரையும் மிரட்டி வருகின்றனர். இதற்கு காவல் துறை வேறு வேலை பார்க்க போகலாம். பணியிடமாற்றம் செய்வதை தவிர திமுக வேறு என்ன செய்து விட முடியும்? அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தீர்கள்? திமுகவிற்கு அடிமையாக காவல் துறை இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? இதை நிறுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் அஞ்ச மாட்டோம். இது செயற்கையான வெற்றி. பிராடு செய்து ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளியுள்ளார்கள். இது நிரந்தரம் இல்லை. இந்த ஆட்சிக்கு முடிவு வரும். போலீஸ் அடிபணிந்து திமுகவினர் காலை கழுவுகிறார்கள். தயவு செய்து மானம் மரியாதை உடன் இருங்கள்.


’அதிமுகவின் தோல்விக்கு மூவர் கூட்டணியே காரணம்’ - கொந்தளிந்த எஸ்.பி.வேலுமணி

திமுகவிற்கு ஓட்டு போட ஒரு காரணமும் இல்லை. 9 மாதத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு போட்டார்கள்? தேர்தலுக்கு பிறகு மக்களிடம் சர்வே செய்த போது, அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள். எப்படி மாறியது? ஜெயக்குமார் மீதான வழக்கை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும். இனியாவது கோவைக்கு திமுக எதாவது செய்ய வேண்டும். அத்தனை திட்டங்களும் நாங்கள் கொண்டு வந்தது தான். அதிகாரிகள், போலீஸ்காரர்கள், திமுக என மூவர் கூட்டணி போட்டு மக்களை தோற்கடித்து விட்டார்கள். ஜனநாயகத்தை தோற்கடித்துள்ளார்கள். திமுகவிற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஜல்ரா போடுகிறார்கள். இதற்கு முன்பு கம்யூனிஸ்ட்கள் இதுபோல இல்லை.

அதிமுக தோற்கவில்லை. அதிகாரிகள், காவல் துறை, திமுகவினரின் முறைகேடுகளால் தோற்கடிக்கப்பட்டோம். இது நிரந்தரம் இல்லை. தொண்டனுக்கும், மக்களுக்கும் பிரச்சனை என்றால் நேரடியாக வருவோம். அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இலஞ்சம் அதிகரித்துள்ளது. அதிமுகவினர் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget