மேலும் அறிய

பெண் குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியுடன் ஓடிவந்த புது டாடி... போக்சோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தததையடுத்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமி கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் ஒருவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து பிரசவித்த பெண் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்ததில் அந்த பெண் 17 வயது சிறுமி என்று அறிந்ததும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குறித்து மேலும் சில  விவரங்கள் கேட்டபோது அந்த சிறுமியால் எதுவும் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்யமுடியாமல் காவல்துறையினர் தவித்தனர். அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் லாபகமாக விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும், தனக்கும் இரு வீட்டார் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் முகப்பேரில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்ததாகவும், அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் தற்போது அம்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பின்னர் சிறுமி வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு ஒப்படைக்க, மனைவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை காவல்துறையினர் வரவழைத்தனர்.

தனது மனைவிக்கு பாப்பா பொறந்திருக்கு என்று மகிழ்ச்சியுடன் சாக்லேட் வாங்கிவந்த சதீஷ்குமாரை மடக்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை திருமணம் செய்தவதற்கு முன்புதான்  பெண்ணின் வயது தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்கு பின்புதான் அவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். 

ஆதார் அட்டை அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின் போது 16 வயது என்றும் தற்போது 17 வயது என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதல் பெற்றனர். தொடர்ந்து, வயது பூர்த்தியாகாத மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  மேலும், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
SBI Recruitment 2025: எஸ்பிஐ வங்கியில் 6,589 பணியிடங்கள் - ரூ.8 லட்சம் ஊதியம், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு?
SBI Recruitment 2025: எஸ்பிஐ வங்கியில் 6,589 பணியிடங்கள் - ரூ.8 லட்சம் ஊதியம், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு?
Embed widget