மேலும் அறிய

திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

மணிகண்டனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்  எஸ்.ஐ சண்முகவேல் கொலையில் தொடர்புடைய முக்கியநபரான மணிகண்டனை பிடிக்க போலீசார் முயற்சி செய்த போது, தப்பிக்க முயன்ற மணிகண்டன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்

எஸ்.எஸ்.ஐ கொலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, குடும்ப தகராரை விசாரிக்க சென்ற  சிறப்பு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோருக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது விசாரணையின் போது ஆத்திரம் அடைந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், அரிவாளால் காவல் ஆய்வாளரை சரமாரியாக  தாக்கி கொடூரமாக வெட்டிபடுகொலை செய்தனர். அருகில் இருந்த போலீஸ் வாகன ஓட்டுநர் அழகுராஜா சிறிது காயமடைந்தார்.

தீவிர தேடுதல் பணி:

இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். டிஜிபி சசிமோகன் நேரில் சென்று சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவாகவே இருந்தார்.

காலையில் கைது:

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன், இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டனை, போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

போலீஸ் எண்கவுண்டர்:

அப்போது திடீரென அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விளக்கம் அளிக்கபடும்:

இந்த எண்கவுண்டர்  சம்பவம் தொடர்பாக பேசி உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மணிகண்டன் போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget