மேலும் அறிய

திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

மணிகண்டனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்  எஸ்.ஐ சண்முகவேல் கொலையில் தொடர்புடைய முக்கியநபரான மணிகண்டனை பிடிக்க போலீசார் முயற்சி செய்த போது, தப்பிக்க முயன்ற மணிகண்டன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்

எஸ்.எஸ்.ஐ கொலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, குடும்ப தகராரை விசாரிக்க சென்ற  சிறப்பு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோருக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது விசாரணையின் போது ஆத்திரம் அடைந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், அரிவாளால் காவல் ஆய்வாளரை சரமாரியாக  தாக்கி கொடூரமாக வெட்டிபடுகொலை செய்தனர். அருகில் இருந்த போலீஸ் வாகன ஓட்டுநர் அழகுராஜா சிறிது காயமடைந்தார்.

தீவிர தேடுதல் பணி:

இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். டிஜிபி சசிமோகன் நேரில் சென்று சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவாகவே இருந்தார்.

காலையில் கைது:

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன், இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டனை, போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

போலீஸ் எண்கவுண்டர்:

அப்போது திடீரென அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விளக்கம் அளிக்கபடும்:

இந்த எண்கவுண்டர்  சம்பவம் தொடர்பாக பேசி உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மணிகண்டன் போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!
​60 பைக்குகள்.. 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கும்பல்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
"நம் ஏரி, நம் உயிர்நாடி! குறிச்சி கிராம மக்களின் அசாத்திய கூட்டு முயற்சி... மீண்டெழுந்தது 383 ஏக்கர் நீர்நிலை!"
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Online Deed Registration : இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Embed widget