மேலும் அறிய

வீட்டுக்குள் துர்நாற்றம்.. சிக்கிய கடிதம்.. கொரோனா வேலையிழப்பால் பறிபோன இரு உயிர்கள்!

கொரோனா காரணமாக சுசீந்திரன் வேலை இழந்துள்ளார். அதனை அடுத்து, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கொரோனா சூழல் காரணமாக வேலை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விழுப்பரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. எனினும், வேலையை இழந்து இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் நிறையப்பேர் சவாலான வாழ்க்கையை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், விழுப்பரம் கே.கே ரோடு பதியைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவர் (58) அவரது தங்கை பரிமளா (50) ஆகியோர் பண கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனியார் கடை ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார் சுசீந்திரன். குடும்ப பிரச்சனையாக கணவரை பிரிந்து இருந்த பரிமளா, தனது அண்ணனுடன் வசிந்து வந்துள்ளார்.

வீட்டுக்குள் துர்நாற்றம்.. சிக்கிய கடிதம்.. கொரோனா வேலையிழப்பால் பறிபோன இரு உயிர்கள்!

இந்நிலையில், கொரோனா காரணமாக சுசீந்திரன் வேலை இழந்துள்ளார். இதனால், அவர்களால் வீட்டு செலவு, மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளது. அதனை அடுத்து, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று காலை முதல் சுசீந்திரனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டை உடைத்து கொண்டு சென்று பார்த்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருவரின் உடல்களை கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வீட்டை பரிசோதனை செய்து காவல் துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், தனது கணவர் உறவினர்கள் மூலம் மாதம் தோறும் கிடைத்துவந்த பணத்தை வைத்து சமாளித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக எதுவும் தரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், தனது அண்ணனுக்கு மன நிலை பாதித்த நிலையில், தனக்கும் மருத்துவ உதவி அதிகம் தேவைப்பட்டதால் பண கஷ்டம் இருந்த சூழலில் சாக முடிவு செய்திருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். தங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், வீடில் உள்ள பொருட்களை விற்று பானுமதி என்பவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
Embed widget