மேலும் அறிய

Crime: பெற்ற மகன், மகளை கொலை செய்துவிட்டு தாய் தந்த வாக்குமூலம் - தந்தையே இப்படியா?

Bangaluru Crime: பெங்களூருவில் பெற்ற தாயே மகன் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bangaluru Crime: பெங்களூருவில் பெற்ற மகன் மற்றும் மகளை கொலை செய்த தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகன், மகளை கொன்ற தாய்:

கடந்த 10ம் தேதி இரவு பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறையை பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனது மகன் மற்றும் மகளை தானே கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தந்த முகவரி விவரங்களின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்: Madurai Chithirai Thiruvizha: இன்று கோலாகலமாக தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா..! ஏப்.21 மீனாட்சி திருக்கல்யாணம்

மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை:

போலிசார் நடத்திய விசாரணையில், ”பெங்களூரு ஜாலஹள்ளி அருகே போவி காலனியில் நான் வசித்து வருகிறேன். தனக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் இருந்தனர். தனது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தார்.  இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் ஜாலஹள்ளி போலீசார், எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனது கணவர் பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் சிறைக்குச் சென்ற பிறகு எனது மகன், மகளுடன் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். அவர்களை வளர்ப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அதன்பிறகும் பணப்பிரச்சினை தொடர்ந்து இருந்தது.

தீராத நிதிப்பிரச்னை:

கணவர் சிறைக்கு சென்ற பின்பு நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். வேலைக்குச் சென்றாலும் நிதிப் பிரச்னை தீரவில்லை. நான் பட்ட கஷ்டங்களை எனது மகன், மகளும் அனுபவிக்க கூடாது என்று நினைத்தேன். இதனால் தான்  நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த எனது மகன் மற்றும் மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி, மூச்சை திணறடித்து கொலை செய்தேன்”என கண்ணீர் மல்க அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Buddhism: பௌத்தத்திற்கு மாற அரசின் அனுமதி தேவை.. மத சுதந்திரத்தில் தலையிடுகிறதா பாஜக அரசு?

இதனிடையே, சம்பவம் நடந்த அன்று அந்த பெண்ணின் தாய் வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இதனால் மகன், மகளுடன் தனியாக இருந்த பெண், 2 பேரையும் கொலை செய்துள்ளார். ஒருவேளை பெண்ணின் தாயார் வீட்டில் இருந்திருந்தால் 2 குழந்தைகளும்  உயிர் பிழைத்து இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Embed widget