மேலும் அறிய

திருச்சி உழவர் சந்தை சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாநகர் தென்னூர் உழவர் சந்தை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன்வத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி அம்ருத் திட்டத்தின்படி பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 638 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் பணிகள் முடிந்த 409 கி.மீ பகுதிகளில் 90 கி.மீ அளவிற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் 180 கி.மீ அளவிற்கு தார்சாலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் 210 கி.மீ அளவிற்கு நடக்கிறது. இதில் 70 கிமீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்து, தற்போது தார் சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 40 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதுபோல் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 103 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் 72 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


திருச்சி உழவர் சந்தை சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

குறிப்பாக மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிதி பெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் மந்த கதியில்  பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு பணிகளுக்காக சாலையில் தோண்டபட்ட பள்ளங்கள் முழுமையாக மூடபடாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என குற்றச்சம்சாட்டினர். பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டாமல் , டெண்டர் எடுத்தவர்களுக்கு மட்டும் சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். சிறிது நேரம் மழை பெய்தாலே சேரும், சகதியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது, அதே சமயம் சாலைகளில் தோண்டபட்ட பள்ளங்கள் சரியாக மூடபடததால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள். 


திருச்சி உழவர் சந்தை சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

இந்நிலையில் திருச்சியி முக்கியமான இடமாக கருதபடும் தென்னூர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், பொதுமக்கள் காய்கறிகள் வங்குவதற்கு சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது.. தென்னூர் உழவு சந்தையில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது.  மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக  பல்வேறு பகுதிகளில் இருந்து உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வருவார்கள். அனைவருமே இந்த பாதையை தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்த பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் மோசமாக நிலையை அடைகிறது. அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்காலிகமாக அந்த சாலையை சீரமைப்பார்கள், அதே சமயம் அந்த சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் பல விபத்துகளும் நடந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலம் தொடங்கும் முன்னே அவபோது மாலை நேரங்களில் பெய்யும் சாதாரண மழைக்கே இந்த சாலை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் சாலையில் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமலும், சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளங்களை மூடப்படாமல் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதியவர் அந்த சாலையில் ஓரமாக நடந்து செல்லும் போது தவறி கீழே விழுந்து விட்டார். இது போன்ற விபத்துக்கள் நடப்பதாக தெரிவித்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Govt., Marriage Advance: அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt., Marriage Advance: அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Embed widget