மேலும் அறிய

தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற பால் வண்டியில் பண்டல் பண்டலாக பணம்- போலீஸ் விசாரணை

’’காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ஒட்டுநரால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியை தீவிர சோதனை நடத்தினர்’’

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கேரளா கொண்டு செல்ல இருந்த 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்
 
தென்காசி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகள் மேற்கரை மற்றும் புளியரை என இரண்டு பகுதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் புளியரை வழியாக தான் சென்ற வருவது வழக்கம். இதனால் புளியரை வழியாக கேரளா செல்லும் சாலையில் வனத்துறை, காவல்துறை, வணிகவரித்துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகிய நான்கு துறைகளின் சோதனை சாவடிகள் உள்ளது.
 
தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற பால் வண்டியில் பண்டல் பண்டலாக பணம்- போலீஸ் விசாரணை
 
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கேரள காவல்துறையினர் அங்கு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அதே போன்று நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களின் எல்லை பகுதியில் உள்ள காவல் துறையினர் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இரு மாநில எல்லைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் கும்பல்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற பால் வண்டியில் பண்டல் பண்டலாக பணம்- போலீஸ் விசாரணை
 
இந்நிலையில் இன்று தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு பால் கொண்டு செல்லும் டேங்கர் லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
 
இந்த வாகனத்தை சுரண்டையை சேர்ந்த வாகன ஓட்டுநர் காளி சங்கர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ஒட்டுநரால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியை தீவிர சோதனை செய்த போது, அந்த வாகனத்தில் பண்டல் பண்டலாக பணம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய். அனைத்தும் 3 பண்டல்களாக பிரிக்கப்பட்டும் 500 ரூபாய் கட்டுகளாக கட்டப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற பால் வண்டியில் பண்டல் பண்டலாக பணம்- போலீஸ் விசாரணை
 
உடனடியாக தமிழ்நாடு காவல்துறையினர் அந்த பணத்தை கேரள மாநில காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் காளிராஜ் வசம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பணத்தை செங்கோட்டையில் உள்ள நபர் ஒருவர் கேரள மாநிலம் செங்கனூர் பகுதிக்கு கொடுத்து விடுவதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
எல்லையில் பிடிபட்ட பணம் தங்கம் வாங்குவதற்கு கொண்டு செல்லப்பட்ட பணமா ? இல்லை ஹவாலா பணமா இல்லை வேறு ஏதேனும் சமூக விரோத செயலுக்காக இந்த பணம்  கொண்டு செல்லபட்டதா என்பது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kuldeep Rinku: பளீர்..! மைதானத்திலேயே ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ் - சாதி ஆணவமா? வீடியோ வைரல்
Kuldeep Rinku: பளீர்..! மைதானத்திலேயே ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ் - சாதி ஆணவமா? வீடியோ வைரல்
Akshaya Tritiya: அட்சய  திருதியில் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! கருணை காட்டிய தங்க விலை..
Akshaya Tritiya: அட்சய திருதியில் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! கருணை காட்டிய தங்க விலை..
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - தமிழர்கள் 3 பேர், அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - தமிழர்கள் 3 பேர், அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Rohit Sharma: தோனிக்கு அப்புறம் யாருடா? ரோகித் சர்மான்னு பேருடா..! ஜனநாயகனின் பிறந்தநாள் - சாதனை பட்டியல்
Rohit Sharma: தோனிக்கு அப்புறம் யாருடா? ரோகித் சர்மான்னு பேருடா..! ஜனநாயகனின் பிறந்தநாள் - சாதனை பட்டியல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kuldeep Rinku: பளீர்..! மைதானத்திலேயே ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ் - சாதி ஆணவமா? வீடியோ வைரல்
Kuldeep Rinku: பளீர்..! மைதானத்திலேயே ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ் - சாதி ஆணவமா? வீடியோ வைரல்
Akshaya Tritiya: அட்சய  திருதியில் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! கருணை காட்டிய தங்க விலை..
Akshaya Tritiya: அட்சய திருதியில் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! கருணை காட்டிய தங்க விலை..
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - தமிழர்கள் 3 பேர், அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Kolkata Fire: அடக்கொடுமையே..! திடீரென பற்றி எரிந்த தீ - தமிழர்கள் 3 பேர், அலறி துடித்து பறிபோன 14 உயிர்கள்
Rohit Sharma: தோனிக்கு அப்புறம் யாருடா? ரோகித் சர்மான்னு பேருடா..! ஜனநாயகனின் பிறந்தநாள் - சாதனை பட்டியல்
Rohit Sharma: தோனிக்கு அப்புறம் யாருடா? ரோகித் சர்மான்னு பேருடா..! ஜனநாயகனின் பிறந்தநாள் - சாதனை பட்டியல்
Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
CSK Vs PBKS: பொறுத்தது போதும், பொங்கி எழுமா சிஎஸ்கே? பஞ்சாபை பந்தாடுமா? பங்காளிக்கு உதவுமா தோனி படை?
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget