மேலும் அறிய

Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்

Simhachalam Temple Accident: ஆந்திர மாநிலம் சிம்ஹாசலத்தில் கோயில் திருவிழாவின் போது சுவர் சரிந்து விழுந்த விபத்தில், பக்தர்கள் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simhachalam Temple Accident: சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் திருவிழாவின் போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிம்ஹாசலம் கோயிலில் விபத்து:

ஆந்திரமாநிலம் சிம்ஹாசலத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனோட்சவம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமியின் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 300 ரூபாய் டோக்கன் பெற்றும் பலர் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அப்போது பெய்த மழைகாரணமாக, புதியதாக கட்டப்பட்டு இருந்த சுவர் சரிந்து, 300 ரூபாய் டோக்கன் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்துள்ளது.

பக்தர்கள் 9 பேர் பலி

20 அடி நீள சுவர் இடிந்து விழுந்த இந்த சம்பவத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மீட்கப்பட்டு கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதற்கட்டமாக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் இறந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலத்தில் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி தனது உண்மையான வடிவத்தில் காணப்படுகிறார். சந்தனோட்சவத்தின் போது சிம்ஹாத்ரி அப்பண்ணாவின் உண்மையான வடிவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை ஒரு மணிக்கு, பூசாரிகள் சுப்ரபாத சேவையுடன் இறைவனை எழுப்பினர். பின்னர், இறைவனின் மீது இருந்த சந்தனம் பிரிக்கப்பட்டது. தனது உண்மையான வடிவத்தில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்த இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜை விழாக்களுக்குப் பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பூசாபதி அசோக் கஜபதிராஜு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதலில் உண்மையான தரிசனம் பெறுவார்கள் என்பது அறியப்படுகிறது. இந்நிலையில் தான் துரதிர்ஷ்டவசமாக, அப்பண்ணா கோயிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்.

அரசு விளக்கம்:

சிம்ஹாசலம் கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சத்ய பிரசாத் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில்பக்தர்கள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். சுவர் இடிந்து விழுந்த பகுதியில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை நாங்கள் வழங்கி வருகிறோம். பக்தர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார். முன்னதாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான கோயிலான திருப்பதியில் கடந்த ஜனவரி மாதமேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget