மேலும் அறிய

Simhachalam Temple : கடவுளுக்கு கண் இல்லையா? சரிந்த சுவர், திருவிழாவில் பறிபோன 9 பக்தர்களின் உயிர்கள்

Simhachalam Temple Accident: ஆந்திர மாநிலம் சிம்ஹாசலத்தில் கோயில் திருவிழாவின் போது சுவர் சரிந்து விழுந்த விபத்தில், பக்தர்கள் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simhachalam Temple Accident: சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் திருவிழாவின் போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிம்ஹாசலம் கோயிலில் விபத்து:

ஆந்திரமாநிலம் சிம்ஹாசலத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் சிம்ஹாத்ரி அப்பண்ணா கோயில் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனோட்சவம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமியின் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 300 ரூபாய் டோக்கன் பெற்றும் பலர் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அப்போது பெய்த மழைகாரணமாக, புதியதாக கட்டப்பட்டு இருந்த சுவர் சரிந்து, 300 ரூபாய் டோக்கன் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்துள்ளது.

பக்தர்கள் 9 பேர் பலி

20 அடி நீள சுவர் இடிந்து விழுந்த இந்த சம்பவத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மீட்கப்பட்டு கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதற்கட்டமாக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் இறந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலத்தில் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி தனது உண்மையான வடிவத்தில் காணப்படுகிறார். சந்தனோட்சவத்தின் போது சிம்ஹாத்ரி அப்பண்ணாவின் உண்மையான வடிவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை ஒரு மணிக்கு, பூசாரிகள் சுப்ரபாத சேவையுடன் இறைவனை எழுப்பினர். பின்னர், இறைவனின் மீது இருந்த சந்தனம் பிரிக்கப்பட்டது. தனது உண்மையான வடிவத்தில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்த இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜை விழாக்களுக்குப் பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பூசாபதி அசோக் கஜபதிராஜு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதலில் உண்மையான தரிசனம் பெறுவார்கள் என்பது அறியப்படுகிறது. இந்நிலையில் தான் துரதிர்ஷ்டவசமாக, அப்பண்ணா கோயிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்.

அரசு விளக்கம்:

சிம்ஹாசலம் கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சத்ய பிரசாத் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில்பக்தர்கள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். சுவர் இடிந்து விழுந்த பகுதியில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை நாங்கள் வழங்கி வருகிறோம். பக்தர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார். முன்னதாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான கோயிலான திருப்பதியில் கடந்த ஜனவரி மாதமேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget