மேலும் அறிய

தஞ்சை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு-ஐஜி தனிப்படை எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை

’’அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள், ஹார்டுடிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள், அலுவலகத்திற்குள் இருந்த 1.50 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்து சென்று விட்டதாக புகார்’’

தஞ்சாவூரை சேர்ந்தவர் காமராஜ். இவர் பழைய கோர்ட் சாலையிலுள்ள காம்பளக்ஸில், தனது அலுவலகத்தை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு கோபு (எ) கலியமூர்த்தி என்பவர் உதவி வழக்கறிஞராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை, காவல் துறை ஐஜியின் தனிப்படை எஸ்ஐ முத்துகுமார் மற்றும் போலீசார், அதிரடியாக, வழக்கறிஞர் காமராஜ் அலுவலக கதவினை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, அங்குள்ள கண்ணாடி பொருட்கள், மேஜை நாற்காலி உடைத்துள்ளனர். மேலும் கம்ப்யூட்டரிலுள்ள ஹார்டுடிஸ்க், வழக்கிற்குரிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு சென்று விட்டனர்.  இது குறித்து தகவலறிந்து வந்த வழக்கறிஞர்கள் காமராஜ் மற்றும் உதவியாளர் கோபு, அலுவலகத்தில் உள்ள பொருட்கள் உடைந்திருப்பது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனது தரிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதியில் விசாரித்த போது, சாதாராண உடையில் வந்த ஐஜி தனிப்படை போலீசார், இந்த சம்பவங்களை செய்துள்ள என்று தெரிய வந்தது.

பின்னர் வழக்கறிஞர் காமராஜ், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம், மாவட்ட காவல் துறை எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  ஆனால் புகார் தொடர்பாக, போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், கடந்த 23 மற்றும் 24ஆம் தேதி அன்று நீதிமன்ற அலுவலகம் முன்பு, போலீசாரை கண்டித்தும், நீதிமன்றம் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு-ஐஜி தனிப்படை எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை

இந்நிலையில், உதவி வழக்கறிஞர் கோபுவிற்கு, போலீசார், காலை 10 மணிக்கு, திருவையாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராக வேண்டும் என, போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.  இதனால் மேலும் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சித்திரைசெல்வன், கீதா, துணை செயலாளர் பழனியப்பன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 இது குறித்த பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் காமராஜ் கூறுகையில்,

தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி காவல் நிலையத்திற்குட்ப்பட்ட வழக்கு தொடர்பாக, நான் ஆஜராகி வருகின்றேன். எனது அலுவலகத்தில் அந்த வழக்குரிய குற்றம்சாட்டப்பட்டவர்கள், எனது அலுவலகத்திற்கு இருப்பதாக, தவறாக நினைத்து கொண்டு, ஐஜி தனிப்படை எஸ்ஐ முத்துகுமார் மற்றும் போலீசார், எனது அலுவலக கதவினை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, அங்கிருந்த கண்ணாடிகள், ஹார்டுடிஸ்க் மற்றும் முக்கியமான ஆவணங்கள், அலுவலகத்திற்குள் இருந்த 1.50 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்து சென்று விட்டனர். இது குறித்த அனைத்து அதிகாரிகளிடம் புகாரளித்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தஞ்சாவூர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனவே, எஸ்ஐ முத்துக்குமார் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை, கண்டன காலவரையற்ற நீதிமன்றத்தை புறக்கணித்து, வரும் திங்கள் கீழமை நடைபெறும், வழக்கறிஞர்கள் சங்க பொது குழு கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget