மேலும் அறிய

”தேர்தல் வந்தால் மட்டும் தான் அக்கறையா? தியாகி போல் பேசும் செந்தில் பாலாஜி” விளாசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தேர்தல் நெருங்கி விட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தியாகி போல் செந்தில் பாலாஜி பேசி உள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த மணிவாசகம் வீட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது குடும்பத்துடன் அனைவரும் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

மேலும், மணல் அள்ளுவதை தட்டி கேட்டதற்கு அனைவரும் சேர்ந்து அறிவாளால் வெட்டி கொன்று விட்டதாகவும், இரண்டு செல்போன்களை காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும், இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உயிரிழந்த மணிவாசகத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

செய்தியாளர் சந்திப்பு:

அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:  மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் 5 பேரை அறிவாளால் தாக்கியதில் மணிவாசகம் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் சியா கமிட்டி மூலம் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் அனுமதி பெறப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூர் மாவட்டம், மல்லம்பாளையம் பகுதியில் மட்டும் மாட்டு வண்டி, மினி டிப்பர் லாரி, மினி பொக்லைன் ஆகியவற்றை பயன்படுத்தி மணல் அள்ளுவதாக கூறிவிட்டு காவிரி ஆற்றுப்படுகையில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளை கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். 

தொழிலாளர்களுக்கு துரோகம்

தேர்தல் பரப்புரையில் உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு துரோகம் (செந்தில்பாலாஜி) செய்தார். தற்பொழுது மீண்டும் தேர்தல் நெருங்கி விட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தியாகி போல் பேசி உள்ளார்.

தற்போது கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். அதற்கு கேடயமாக மாட்டு வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.

அதிகரித்து வரும் மணல் கொள்ளை:

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது ஒரு உயிர் போயிருக்காது. இதற்கு முழு காரணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி தான்.

மணல் கொள்ளை பிரச்சினைக்காக தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், வழக்கமான நடைமுறை போல் காட்டிக்கொள்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மணிவாசகம் வெட்டி கொலை செய்யப்பட்டார் அவர்கள் தம்பி குட்டி என்கின்ற யோகேஸ்வரன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தனையும் நடந்த பிறகு அரசு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் என்று செந்தில் பாலாஜி கூறுகிறார். 

மணல் அள்ளுவதில் உடந்தை:

இன்னும் ஆறு மாதம்தான் உள்ளது. திமுக ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். கையூட்டு பெற்றுக் கொண்டு மணல் கொள்ளைக்கு உதவியாக இருக்கின்றனர். 

மேலும், கடந்த தேர்தல் பரப்புரையின் போது கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மக்கள் மத்தியில் பேசிய காட்சிகளை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
Embed widget