Trichy Power cut: திருச்சி மாவட்டத்தில் நாளை (17.7.25) இங்கெல்லாம் பவர் கட்... உங்க ஏரியா இருக்கா?
திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும்

Trichy Power Cut Tomorrow: திருச்சி மாவட்டத்தில் நாளை (17ம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 17) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காதுங்க. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஜூலை 17 - வியாழக்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை (ஜூலை 17 - வியாழக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் எவை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி மற்றும் துவரங்குறிச்சி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால். மேற்கண்ட மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை 17 - வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
துவாக்குடி
சிட்கோ நிறுவனம், பெல் நகர், காலிங்கர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் நகர், பெல் நகர், என்.ஐ.டி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாக்குடி, தண்ணீர்பட்டி
துவரங்குறிச்சி
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி. இந்த பகுதிகளில் மின்தடை செய்யறாங்க. கவனம்.





















