Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது நான் தான் என, சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

Seeman Kayalvizhi: வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொள்வார் என, அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
சீமான் மனைவி விளக்கம்:
நடிகை புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சீமானின் வீட்டில் நேற்று போலீஸ் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை அங்கிருந்த ஒருவர் உடனடியாக கிழித்து எரிந்தார். இதுகுறித்து விசாரிக்க சென்றபோது, சீமான் வீட்டு பாதுகாவலருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்ர். முன்னாள் ராணுவ வீரர் என கூறப்படும் அந்த பாதுகாவலர், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்களை சந்தித்தார்.
சம்மனை கிழித்ததே படிக்க தான் - கயல்விழி
செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி, “போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது நான் தான். எடுக்க முடியவில்லை என்பதால் கிழித்து வரச்சொன்னேன். படிப்பதற்காகவே அதனை கிழித்து எடுத்து வரசொன்னேன். எங்கள் வீட்டு பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்து தான் கொடுத்தார். கதவை திறக்கமாட்டோம் என சொல்லவில்லையே. காவல்துறையினர் திட்டமிட்டே இப்படி நடந்துகொண்டனர். மிரட்டவில்லை. எங்கள் வீட்டில் இருந்து கைது செய்து அழைத்துச் சென்றவர்களை காவல் துறையினர் அடித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது தவறானது.
காவல்துறைக்கு ஈகோ - சீமான்
காவல்துறையின் சம்மனை கையெழுத்திட்டு பெற தயாராகவே இருந்தோம். ஆனல், காவல்துறை ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. கடந்தமுறை சம்மன் கொடுக்க வந்தபோதே சீமான் விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதியை கொடுத்தார். ஆனால் முற்றிலும் பழிவாங்கும் நோக்கில் போலீசார் செயல்படுகின்றனர். தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொள்வார். விசாரணையை சந்திப்பார்.
காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
நான் செய்த ஒரே தவறு சம்மனை கிழிக்க சொன்னது தான். எங்கள் வீட்டு பாதுகாவலர் எந்த தவறும் செய்யவில்லை. நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளது. எங்களது வீட்டை முற்றுகையிட வந்தபோது கூட ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் எங்களுக்கு எதிராக செயல்பட்டார். எனது கணவர் நேர்மையான தலைவர். சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. நடிகை வழக்கில் ஏற்கனவே சீமானிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மனரீதியில் துன்புறுத்தவே எங்கள் பாதுகாவலரை கைது செய்துள்ளனர். பாலியல் குற்றத்தை முன்வைத்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. நீதிமன்றம் மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. ” என ன கயல்விழி சீமான் தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்மனை துண்டு துண்டாக கிழித்து, அதனை அங்கேயே கீழே போட்ட சீமான் வீட்டு உதவியாளரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

