மேலும் அறிய

குஜராத் பால விபத்து நடந்த பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் குறைந்தது 47 குழந்தைகள், பல பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படை வீரர்கள்  தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என  குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது. மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட கேபிள் பாலம்  அறுந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் நேற்று இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார். 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதி சான்றிதழை மாநகராட்சி அமைப்பு வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. 

இதற்கு மத்தியில், பாலத்தில் இருந்த சிலர், அதை வேண்டுமென்றே ஆட்டியதாகவும் அதனால்தான் அது சரிந்து விழுந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்திருந்தனர். பின்னர், விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு சில இளைஞர்கள் அந்த பாலத்தின் கேபிளை ஆட்டுவதும் அதை தொடர்ந்து அது அறுந்து விழுந்ததும் பதிவாகியிருந்தது.

 

இந்நிலையில், விபத்து நடந்து பகுதிக்கு பிரதமர் சென்றுள்ளார். அவரிடம், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விளக்கப்பட்டது. பிரதமரின் வருக்கைக்கு முன்னதாக, நேற்றிரவு நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார். அதில் மீட்புப் பணிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தை புதுப்பித்த நிறுவனமான ஓரேவா குழுமம், பாலத்தை திறப்பதற்கு முன்பு குடிமை அதிகாரிகளிடம் இருந்து தகுதி சான்றிதழைப் பெறவில்லை என்பதை மோர்பி முனிசிபல் ஏஜென்சி தலைவர் சந்தீப்சிங் ஜாலா உறுதிப்படுத்தி உள்ளார்.

விபத்து நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 400க்கும் மேற்பட்டோருக்கு 12 முதல் 17 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதனால் அந்த பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பழைய உலோக கேபிள்கள் அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. குஜராத் தடயவியல் ஆய்வகமும் மக்கள் கூட்ட நெரிசலில் பாலம் அறுந்து விழுந்ததை கண்டறிந்துள்ளது.

பாலத்தை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக குறைந்தபட்சம் எட்டு முதல் 12 மாதங்கள் வரை மூடி வைக்க நிறுவனம் ஒப்பு கொண்டது. ஆனால், கடந்த வாரம் பாலத்தை திறந்தது தீவிரமான, பொறுப்பற்ற கவனக்குறைவான செயல் என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget