மேலும் அறிய

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐ சதி; உளவுத் துறை எச்சரிக்கை!

வேளாண் சட்டங்களைப் போல், தொழிலாளர்களுடைய உரிமைகளை முற்றாக பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், அரசு நிறைவேற்றி இருக்கிறது.இதனால், விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். அதேபோல் மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களிலும் போராட்டங்களை நடத்தவிருக்கின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை டெல்லி காவல்துறையையும் மத்திய அரசையும் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வாட்டும் குளிரையும், வதைக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாது விவசாயிகள் போராடி வருகின்றனர். களத்திலேயே பலர் உயிரிழந்துள்ளனர்.



விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐ சதி; உளவுத் துறை எச்சரிக்கை!

அனைத்தும் மூடல்!
இந்நிலையில், இன்று (ஜூன் 26ஆம் தேதி) புகழ்பெற்ற விவசாயிகள் தலைவர் தயானந்த சரஸ்வதி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மாபெரும் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், மாநிலத் தலைநகர்களில் ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால், டெல்லியில் போராட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை டெல்லி காவல்துறையையும் மத்திய அரசையும் எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. போராட்டக் களங்களில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மூடப்படுகிறது. சட்டப்பேரவை வளாகமும் இந்த நேரத்தில் மூடப்படுகிறது.


வேளாண் அமைச்சர் கோரிக்கை:

இன்றைய போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு விவசாய சங்கங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மத்திய வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். "போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு அனைத்து விவசாய சங்கங்களுக்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை அரசு நடத்திவிட்டது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒளிமயமாக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், சம்யுக்த் கிஸான் மோர்சா அமைப்போ, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோரி அவருக்கு மனு அளிக்கவுள்ளோம் என்று கூறியிருக்கிறது. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைக்கவுள்ளனர். மேலும், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராடத்தைக் கைவிடுவதில்லை என்பதில் விவசாய அமைப்புகள் உறுதியோடு இருக்கின்றன. 

வேளாண் சட்டங்களைப் போல், தொழிலாளர்களுடைய உரிமைகளை முற்றாக பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதனால், விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். அதேபோல் மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களிலும் போராட்டங்களை நடத்தவிருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget