மேலும் அறிய

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?

Chief Election Commissioner: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமித்து சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

Chief Election Commissioner:  தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான புதிய விதிகளின் கீழ், நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு நேற்று மாலை கூடி, அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயரை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே ஞானேஷ் குமாரின் நியமனம் வந்துள்ளது. இவர் ஜனவரி 26, 2029 வரை அவர் தலைமை தேர்தல் ஆணையராகத் தொடர்வார். அதாவது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பதவியில் நீடிப்பார். நாட்டின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும், ராஜிவ் குமார் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், நாளை 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்க உள்ளார்.

சட்ட அமைச்சகம் அறிவிப்பு:

இதுதொடர்பான அறிக்கையில், “"தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (சட்டம் எண். 49/2023) இன் பிரிவு 4-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிப்ரவரி 19, 2025 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்" என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யார் இந்த ஞானேஷ்குமார்?

ஞானேஷ் குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். 1988 ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான குமார், கேரள அரசின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள், பொதுப்பணித் துறை, அரசுத் திட்டத்தை நவீனமயமாக்குதல் மற்றும் உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் போன்ற பல்வேறு துறைகளைக் கையாண்டுள்ளார்.

கான்பூரில் உள்ள ஐஎல்டி-யில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தார். இந்தியாவில் ஐசிஎஃப்ஏஎல்-ல் வணிக நிதி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எச்எல்டி-யில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றார்.

முதல் தேர்தல்:

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலை தான் முதல் பணியாக மேற்கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற சட்டமன்றத் தேர்தல்களை தலைமையேற்று நடத்த உள்ளார். இதற்கிடையில், 1989 கேடரைச் சேர்ந்த டாக்டர் விவேக் ஜோஷி, ஐஏஎஸ், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழு:

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான புதிய விதிகள் தொடர்பான, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்த முடிவை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட போதிலும், இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்.  அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயரை இறுதி செய்யும் பணி பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வுக் குழுவில் பிரதமர் உடன்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget