மேலும் அறிய

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி. ராஜா மீண்டும் தேர்வு... சவால்களை சமாளிப்பாரா?

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 24ஆவது காங்கிரஸில் (கட்சியின் உச்சபட்ச அமைப்பு) புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா நேற்று ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 24ஆவது காங்கிரஸில் (கட்சியின் உச்சபட்ச அமைப்பு) புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஜூலையில் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியபோது, ​​டி. ராஜா பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 73 வயதான ராஜா ஒரு பிரதான கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை பதவியை வகிக்கும் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

 

பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து பேசிய டி. ராஜா, "கட்சிக்கு புத்துயிர் அளிப்பது, பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது என்ற இரட்டை இலக்கை கொண்டு முன்னேறுவேன்.

பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் முதன்மை நோக்கம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை. இந்த பொதுவான இலக்கிற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும்" என்றார்.

பாஜக ஆட்சியை விமர்சித்துள்ள அவர், "அரசியல் சாசன நிலைகளை மறுவரையறை செய்து, மதச்சார்பற்ற மற்றும் பொதுநல அரசை தகர்க்க முற்படும் பேரழிவை பிளவுபடுத்தும் அரசாங்கத்தை மோடி வழிநடத்தியுள்ளார்" என்றார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவிவருவது குறித்து பேசியுள்ள அவர், "கூட்டாட்சி அமைப்பை அழிக்க பாஜக களமிறங்கியுள்ளது. ஆளுநர் பதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அவமதிக்கப்படுகின்றன. 

இது ஒரு பேரழிவுகரமான போக்கு, அதை எதிர்க்காவிட்டால், நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தன்மையையே மாற்றிவிடும். அக்கட்சியின் தேர்தல் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவு கவலையளிக்கிறது. கட்சியின் தேர்தல் செயல்திறன் நமது கருத்தியல் மற்றும் அரசியல் செல்வாக்குடன் பொருந்தவில்லை என்பதை நாங்கள் அறிவோம். 

2025இல், நாங்கள் எங்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம். அதற்கு முன் நம் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை கட்சியை பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், பல்வேறு வெகுஜன இயக்கங்களில் நமது ஈடுபாட்டையும், மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் உள்ள பங்கையும் நாம் மறந்துவிட முடியாது" என்றார்.

1925இல் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2025ல் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pollachi Paliyal Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Paliyal Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pollachi Paliyal Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Paliyal Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Gautam Gambhir: பக்கா ஸ்கெட்ச், தட்டி தூக்கியாச்சு - கேட்க ஆள் இல்லை, இந்திய அணியின் பவர்ஃபுல் கோச்சான கம்பீர்
Gautam Gambhir: பக்கா ஸ்கெட்ச், தட்டி தூக்கியாச்சு - கேட்க ஆள் இல்லை, இந்திய அணியின் பவர்ஃபுல் கோச்சான கம்பீர்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Embed widget