மேலும் அறிய

இரட்டை அர்த்தத்தில் பேசும் மயிலாடுதுறை வேளாண் அதிகாரி: பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல், விவசாயிகள் கொந்தளிப்பு! நடவடிக்கை எடுக்குமா அரசு?

மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குநர் மீது பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சேகர், தனது அதிகார வரம்பை மீறி ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும், பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவிரி படுகை உழவர் பெருமக்கள் கூட்டமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், காவிரி படுகை உழவர் பெருமக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் இந்த புகாரை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார், வேளாண் துறையின் நிர்வாகத்தில் நிலவும் பல்வேறு முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


இரட்டை அர்த்தத்தில் பேசும் மயிலாடுதுறை வேளாண் அதிகாரி: பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல், விவசாயிகள் கொந்தளிப்பு! நடவடிக்கை எடுக்குமா அரசு?

புகாரில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

 தன்னிச்சையான இடமாற்றங்கள்

மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சேகர், தனக்குக் கீழ் பணிபுரியும் உதவி மேலாண்மை அலுவலர்கள் மற்றும் பிற ஊழியர்களின் விருப்பங்களைக் கேட்காமல், தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அவர்களை இடமாற்றம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், பணிச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி மிரட்டல்கள்

நேர்மையாகவும், விதிகளைப் பின்பற்றியும் பணி செய்யும் ஊழியர்களை, "பணி உயர்வை தடுத்து விடுவேன்," "பணியிடை நீக்கம் செய்து விடுவேன்" என்று இணை இயக்குநர் சேகர் மிரட்டுவதாகக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த மிரட்டல்கள் காரணமாக, ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இது அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரட்டை அர்த்தத்தில் பேசும் மயிலாடுதுறை வேளாண் அதிகாரி: பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல், விவசாயிகள் கொந்தளிப்பு! நடவடிக்கை எடுக்குமா அரசு?

பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல்

அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் இணை இயக்குநர் சேகர் இரட்டை அர்த்தத்தில் பேசி, அவர்களை மனரீதியாகப் புண்படுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது கடமைக்கு அப்பாற்பட்டு அவரது தனிப்பட்ட பேச்சைக் கேட்க மறுக்கும் பெண் ஊழியர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு பணியிட மாற்றம் அல்லது பணியிடை நீக்க மிரட்டல்கள் விடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தி பாதிப்பு

இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளாலும், ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தாலும், மாவட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் வேளாண் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக உழவர் பெருமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அலுவலர்களின் மன உளைச்சல், வேளாண் துறைப் பணிகளில் தாமதத்தையும், செயல்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இரட்டை அர்த்தத்தில் பேசும் மயிலாடுதுறை வேளாண் அதிகாரி: பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல், விவசாயிகள் கொந்தளிப்பு! நடவடிக்கை எடுக்குமா அரசு?

விவசாயிகளின் கோரிக்கை

காவிரி படுகை உழவர் பெருமக்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்த விவசாயி பாண்டுரெங்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேளாண் துறை இணை இயக்குநர் சேகரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஊழியர்கள் கட்டுப்படாவிட்டால், அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மிரட்டப்படுகிறார்கள். இதனால், நேர்மையாக பணிபுரிய விரும்பும் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பெண் ஊழியர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் கவலைக்குரியவை. எனவே, வேளாண் துறை நிர்வாகத்தில் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இணை இயக்குநர் சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணியாளர்களின் விருப்பத்திற்கேற்ப பணியிடங்களை அமைத்து, உணவு உற்பத்திப் பணிகள் தடையின்றி நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட ஆட்சியர் உறுதி

புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட வேளாண் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
Embed widget