மேலும் அறிய

Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!

Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேரும் பெண்களை எப்படி ஏமாற்றினார்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 9 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தும், வீடியோ எடுத்து மிரட்டியும் ஏராளமான இளம்பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:

2019ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை இந்த கும்பல் எப்படி அரங்கேற்றியது? என்பதை கீழே விரிவாக காணலாம். 

பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார். இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். வசதியான குடும்ப பின்னணியைச் சேர்ந்த இவர்கள் வாட்ஸ் அப்பில் பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ் என்ற வாட்ஸ் அப் குழுவை வைத்திருந்தனர். 

பைக், கார் என்று ஆடம்பரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்த இவர்களில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசனும், சபரிராஜனுமே ஆவார்கள். இவர்களுக்கு கல்லூரி செல்லும் இளம்பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பெண்கள் ஆகியோரிடம் நண்பர்கள் போல பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். 

பண்ணை வீட்டில் அநியாயம்:

பின்னர், அவர்களிடம் காதலிப்பதாக கூறியும் அவர்களை நம்ப வைத்துள்ளனர். பின்னர், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களை தனியாக சந்திக்க வேண்டும், பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று அழைத்துச் செல்கின்றனர். 

இவர்கள் குறிவைக்கும் பெண்களை முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கோவை மாவட்டம் ஆணைமலையில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு திருநாவுக்கரசனோ, சபரிராஜனோ ஒரு பெண்ணை அழைத்துச் சென்று அவரிடம் தனியாக இருப்பதை நண்பர்கள் மூலமாக மறைமுகமாக வீடியோவாக எடுத்துள்ளனர். 

நண்பர்களுக்கு இரை:

பின்னர், அதே வீடியோவை காட்டி அந்த பெண்களை மிரட்டியுள்ளனர். வீடியோவை காட்டி மிரட்டிய பிறகே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவர்களின் சுயரூபம் தெரியவந்துள்ளது. பின்னர்,  வீடியோவை அழித்து விடுமாறும், தன்னை விட்டுவிடுமாறும் கெஞ்சும் பெண்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸின் காம கொடூர விளையாட்டிற்கு ஏராளமான பெண்கள் இரையாகியுள்ளனர். அவ்வாறு இவர்களிடம் சிக்கிய பெண்களை அடித்து சித்ரவதைப்படுத்துவதும், வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டுவதும் என தொடர் கதையாக வைத்துள்ளனர். 

கதிகலங்க வைக்கும் வீடியோ:

பெண்களை கொடுமைப்படுத்திய வீடியோக்களை திருநாவுக்கரசு தனது ஐபோன் செல்போனிலும், சபரிராஜன் தனது லேப்டாப்பிலும் வீடியோக்களாக வைத்திருந்தனர். இவர்கள் இருவரது செல்போன் மற்றும் லேப்டாப்களில் இருந்து மட்டும் 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, சித்ரவதை வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த கொடூரர்களிடம் சிக்கிய 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் விசாரணை நடத்த போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஏராளமான பெண்களை இவர்கள் இதுபோல பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை அறிந்தனர். 

9 பேரும் குற்றவாளிகள்:

பின்னர், இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் அரசால் வழங்கப்பட்டது. அவர்களின் தனியுரிமையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு அதிகளவு இருப்பதாக கருதியதால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த 9 பேர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெண்களை நம்ப வைத்து அவர்கள் வாழ்வை மோசம் செய்யும் இளைஞர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
CM Vijay: விஜய் போட்டோ வைக்கக்கூடாது.. மதிக்காத திமுக மேயர்கள்.. கொதித்தெழும் தவெக கவுன்சிலர்கள்!
CM Vijay: விஜய் போட்டோ வைக்கக்கூடாது.. மதிக்காத திமுக மேயர்கள்.. கொதித்தெழும் தவெக கவுன்சிலர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
Embed widget