Breaking News LIVE, July 28: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான லேட்டஸ்ட் தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
LIVE

Background
“பாஜக கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டம்.
புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்துள்ளது. சமாதானம் பேசச் சென்ற பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் “பாஜக கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டம்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். குறுவை பயிர் சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.
சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்கள். வாயில் நுழைய கூட மாட்டேங்குது - அமைச்சர் சிவசங்கர்
"புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் நம் வாயில் நுழையகூட மாட்டேங்குது. ஏதோ சங்கீதா-னு மட்டும் நினைவுல இருக்கு" சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சைட்டை விருது வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - முதல் தகுதிச் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - முதல் தகுதிச் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது.
இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

