மேலும் அறிய

CM Stalin: இருமொழிக் கொள்கையில் உறுதி; கல்வி நிதி வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கூட்டாட்சித்‌ தத்துவத்தின்‌ அடிப்படையில்‌, லட்சக்கணக்கான மாணவர்கள்‌, ஆசிரியர்களின்‌ நலன்‌ கருதி, இந்த விஷயத்தில்‌ இந்தியப்‌ பிரதமர்‌‌ தலையிட வேண்டுமென்று முதலமைச்சர்‌‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம் என்றும் தங்களுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்‌, “தேசிய கல்விக்‌ கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக்‌ கொள்கையை ஏற்கும்‌ வரை, தமிழ்நாட்டிற்கான “சமக்ர சிக்ஷா’’ திட்டத்தின்கீழ்‌ நிதி விடுவிக்கப்பட மாட்டாது” என்று ஒன்றிய கல்வித்‌துறை அமைச்சர்‌ சமீபத்தில்‌ தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதமிழ்நாடு முதலமைச்சர்‌‌, இது தமிழ்நாட்டில்‌ உள்ள மாணவர்கள்‌, அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌ பெருத்த கவலையையும்‌, கொந்தளிப்பையும்‌ ஏற்படுத்தியுள்ளதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

தமிழ்நாட்டிற்கு விலக்கு

தமிழ்நாட்டின்‌ கல்வி மற்றும்‌ சமூகச்‌ சூழலில்‌, இருமொழிக்‌ கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும்‌, அதனைப்‌ பின்பற்றுவதில்‌ தமிழ்நாடு எப்பொழுதும்‌ உறுதியாக உள்ளது என்றும்‌ குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல்‌ மொழிகள்‌ விதி, 1976-ல்‌ குறிப்பிடப்பட்டுள்ளபடி, “அலுவல்‌ மொழிச்‌ சட்டம்‌, 1963”-ஐச்‌ செயல்படுத்துவதில்‌ இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப்‌ பள்ளிகள்‌ மும்மொழிக்‌ கொள்கையைப்‌ பின்பற்றுவதால்‌ தான்‌, தமிழ்நாட்டில்‌ அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளவர்‌, இந்த இரு மொழிக்‌ கொள்கை மற்றும்‌ சமூக நீதியின்‌ அடிப்படையில்‌ கட்டமைக்கப்பட்ட முற்போக்குக்‌ கொள்கைகளின்‌ காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில்‌ தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள்‌ மற்றும்‌ அதற்கு வித்திடும்‌ முன்முயற்சிகளைக்‌ காண முடிகிறது எனவும்‌, எங்கள்‌ இருமொழிக்‌ கொள்கையில்‌ எந்தவொரு மாற்றமும்‌ கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும்‌, தமிழ்நாட்டு மக்களுக்கும்‌ பெரிய அளவில்‌ பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும்‌ சுட்டிக்‌ காட்டியுள்ளார்‌.

இதுதவிர, தேசியக்‌ கல்விக்‌ கொள்கை-2020-ல்‌ குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள்‌ குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசின்‌ ஆழ்ந்த கவலைகள்‌ முறையாகத்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும்‌, அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில்‌ விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களிடம்‌ சமர்ப்பிக்கப்பட்டதாகவும்‌ தெரிவித்துள்ள முதலமைச்சர்‌‌, இருப்பினும்‌ பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும்‌, “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால்‌ வழங்கப்படாமல்‌ உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

மாநிலங்களின்‌ உரிமைகளை பெருமளவில்‌ பாதிக்கும்‌

ஒன்றிய அரசின்‌ இரண்டு வெவ்வேறு திட்டங்களான “சமக்ர சிக்ஷா” திட்டத்தையும்‌, தேசிய கல்விக்‌ கொள்கையைப்‌ பிரதிபலிக்கும்‌ பி.எம்‌. ஸ்ரீ. திட்டத்தையும்‌ ஒன்றாகப் பொருத்திப்‌ பார்ப்பது என்பது அடிப்படையில்‌ ஏற்றுக்‌ கொள்ள முடியாத ஒன்று என்பதைத்‌தான்‌ மீண்டும்‌ வலியுறுத்துவதாகக்‌ குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்‌‌, தற்போது ஒரு மாநிலத்தில்‌, அங்குள்ள காலச்‌ சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும்‌ கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக்‌ கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும்‌ விவகாரங்களில்‌ ஒன்றிய அரசு அழுத்தம்‌ தரும்‌ இத்தகைய முயற்சி, கூட்டாட்சித்‌ தத்துவத்தை அப்பட்டமாக மீறும்‌ செயலாகும்‌ என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிடட தேவைகளின்‌ அடிப்படையில்‌ தங்களது கல்விக்‌ கொள்கைகளை வடிவமைக்கும்‌ மாநிலங்களின்‌ உரிமைகளை பெருமளவில்‌ பாதிக்கும்‌ என்றும்‌ கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்‌.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும்‌ இந்தத்‌ திட்டத்தின்கீழ்‌ நிதி விடுவிக்கப்படாததால்‌, ஆசிரியர்கள்‌ சம்பளம்‌, மாணவர்களுக்கான நலத்‌ திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள்‌, கல்வி உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ பயிலும்‌ வறிய நிலையில்‌ வாழும்‌மாணவர்களுக்கான கல்வித்‌ தொகையைச்‌ திருப்பிச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ தொலைதூரப்‌ பகுதிகளில்‌ உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கியப் பணிகள்‌ பாதிக்கப்பட்டுள்ளதாகக்‌ குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்‌‌, கூட்டாட்சித்‌ தத்துவத்தின்‌ அடிப்படையில்‌, இலட்சக்கணக்கான மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ நலன்‌ கருதி, இந்த விஷயத்தில்‌ இந்தியப்‌ பிரதமர்‌‌ தலையிட வேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சுங்க? முதல்வர் விஜயிடம் 10 அம்ச கோரிக்கை அளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்!
பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சுங்க? முதல்வர் விஜயிடம் 10 அம்ச கோரிக்கை அளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
TVK Vijay:
TVK Vijay: "முட்டு கொடுக்க முடியாது முதல்வரே!" பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Embed widget