மேலும் அறிய

500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிய பெண் வழக்கறிஞர் - சிக்கியது எப்படி?

கள்ள நோட்டு மற்றும் பணம்  இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் வழக்கறிஞரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

பெரியகுளம் வடகரை பகுதியில் 500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து நீதிமன்ற ஊழியரை ஏமாற்றிய வழக்கில் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் விக்னேஷ் மூர்த்தி என்பவர் 38,000 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரம் அவர் செலுத்திய பணம் அனைத்தையும் உள்வாங்காமல் வெளியே தள்ளி உள்ளது. இதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியன் வங்கி மேலாளர் இடம் சென்று ஏடிஎம் இயந்திரம் பணத்தை உள்வாங்காமல் வெளியே தள்ளியது குறித்து தெரிவித்துள்ளார்.


500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிய  பெண் வழக்கறிஞர் - சிக்கியது எப்படி?

கள்ள நோட்டு

அப்பொழுது அவரிடம் இருந்த 38,000 ரூபாய் நோட்டுக்களை வாங்கி பார்த்த பொழுது அவை அனைத்தும் கள்ள நோட்டுகளாக இருப்பதை கண்டறிந்த வங்கி மேலாளர் பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்ததை தொடர்ந்து, விக்னேஷ் மூர்த்தியை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த விசாரணையில் பண இரட்டிப்பு மோசடியில் அந்த இளைஞரை பெண் வழக்கறிஞர் ஏமாற்றி கள்ள நோட்டுகளை வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.


500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிய  பெண் வழக்கறிஞர் - சிக்கியது எப்படி?

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேவாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பணத் தேவை இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பெரியகுளம் வடகரை ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவஜோதி  (வயது 38) என்ற பெண் நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும்போது நீதிமன்ற அலுவலக உதவியாளர் விக்னேஷ் மூர்த்தி பண தேவை குறித்து வழக்கறிஞர் ஜீவஜோதியிடம் தெரிவித்துள்ளார். அப்பொழுது ரூ.60,000 ஆயிரம் கொடுத்தால் வெளிநாட்டு டாலர் ரூ.10 லட்சம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 12.05.2024 தேதி அன்று வழக்கறிஞர் ஜீவஜோதி விக்னேஷ் மூர்த்தியை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றதாக கூறப்படுகிறது.

பண மோசடி

மேலும் 13/05/24 ஆம் தேதி ஒரு தனியார் லாட்ஜில் அழைத்துச் சென்ற ஜீவஜோதி ஒருவருக்கு போன் செய்த போது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் வந்து விக்னேஷ் மூர்த்தி கொண்டு வந்திருந்த 44,500 ரூபாயை கொடுத்த போது அவர் ஒரு பெட்டியில் பவுடர்களை போட்டு அதில் விக்னேஷ் கொண்டு வந்த பணத்தையும் போட்டு குலுக்கி பெட்டியை அடைத்து 10 நாட்கள் கழித்து திறந்தால் பத்து லட்சம் பணம் இருக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.


500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிய  பெண் வழக்கறிஞர் - சிக்கியது எப்படி?

நேற்று பெட்டியை திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.38 ஆயிரம் பணம் மட்டும் இருந்துள்ளது. பணம் குறைவாக இருக்கிறது என்று அட்வகேட் ஜீவஜோதிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி மழுப்பி விட்டார். இவர் பணத்தை அவசரத் தேவைக்காக பெரியகுளம்  வடகரை இந்தியன் வங்கி ATMல் தனது அக்கவுண்டில் போட்டுள்ளார். பணம் உள்ளே போகாமல் திரும்ப வந்ததால் மேனேஜரிடம் சென்று முறையிட்டுள்ளார்.  

வழக்கறிஞர் மீது வழக்குபதிவு

இந்தியன் பேங்க் மேனேஜர் கௌதம் பணத்தை சோதனை செய்தபோது அது கள்ள நோட்டு என தெரிய வந்தவுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, பெரியகுளம் வடகரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பெண் வழக்கறிஞர் ஜீவஜோதியை கைது செய்து வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் அவை கள்ள நோட்டுகள் இல்லை என்பது உறுதி செய்ததோடு 500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து நீதிமன்ற ஊழியரை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Embed widget