மேலும் அறிய

Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

Cong Slams MODI: பிரதமர் மோடி பொய் பேசுவதை நோயாக கொண்டிருப்பதாக, செமி கண்டக்டர் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Cong Slams MODI: செமி கண்டக்டர் தொடர்பான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு:

செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, “ செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) ஆலைகளை அமைப்பது குறித்த விவாதங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும், அவை ஒருபோதும் நிறைவேறவில்லை. குறைக்கடத்தி தொழிற்சாலையை உருவாக்குவதற்கான ஆரம்ப முயற்சி சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையிலேயே கொல்லப்பட்டது. நான் எந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க செங்கோட்டையில் இல்லை. ஆனால் நாட்டின் இளைஞர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். குறைக்கடத்தி தொழிற்சாலை என்ற யோசனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஆனால், வடிவம் பெறுவதற்கு முன்பே அது அழிக்கப்பட்டது. நாம் 50-60 ஆண்டுகளை இழந்தோம்” என பேசினார். இதன் மூலம் இந்தியாவின் குறைகடத்தி துறையை ஆரம்பிக்காமலேயே காங்கிரஸ் அழித்துவிட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். 

”பொய்யர் மோடி”

பிரதமர் மோடியின் உரையை குறிப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மிஸ்டர் மோடி எவ்வளவு மோசமான பொய்யர் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. சண்டிகரில் நிறுவப்பட்ட செமிகண்டக்டர்ஸ் காம்ப்ளக்ஸ் லிமிடெட் 1983 இல் செயல்படத் தொடங்கியது” என குறிப்பிட்டுள்ளார். இதனை பகிரும் காங்கிரஸ் கட்சியினர், நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் செய்து வருகிறார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மிரட்டப்படும் ஆலைகள்:

செமிகண்டக்டர் விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது, ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அண்மைக்காலமாக அவர் வெளியிட்ட குற்றச்சாட்டுகளில், “குறைக்கடத்தி உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ஒதுக்கீடு செய்வதில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சாதகமாக இருக்கிறது. அரசாங்கம் நான்கு முக்கிய குறைக்கடத்தி முன்மொழிவுகளை அங்கீகரித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்காக திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன அல்லது நிபந்தனைகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா ஆலைக்கான ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தின் விண்ணப்பம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தெலங்கானாவிற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட இரண்டு திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திட்டத்திற்கு குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய ஒப்புக்கொண்ட பின்னரே பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? இந்தியாவை வலிமையாக்கும் மாநிலங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்” என ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget