மேலும் அறிய

மயிலாடுதுறை: திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்! மாணவர்களே, இளைஞர்களே, தவறவிடாதீர்கள்!

மயிலாடுதுறை: திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு - ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த “திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 31.12.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், “திருக்குறள் திருப்பணிகள்” தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

முதலமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் ஒரு சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் குழு உறுப்பினர்களான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) சுகன்யா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், அரசு விருது பெற்ற ஆசிரியர்களான துரை. குணசேகரன் மற்றும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் இரா. செல்வகுமார், மற்றும் மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெனிபர் ச. பவுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள்

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

  • மயிலாடுதுறை: திருக்குறள் பேரமைப்பு சார்பில், தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

 

  • சீர்காழி: திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில், சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

 

  • குத்தாலம்: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.


பயிற்சி அட்டவணை மற்றும் சான்றிதழ்

திருக்குறள் பயிற்சி வகுப்புகள் வரும் 23.08.2025 அன்று தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படும். இந்த வகுப்புகள் மொத்தம் 30 வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கு, பயிற்சியின் இறுதி நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்  வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முயற்சி, தமிழ் மொழியின் வளம் மற்றும் திருக்குறளின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Embed widget