மேலும் அறிய

குற்றாலத்தில் அதிர்ச்சி! ‘ஸ்பா’ என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழில் - 4 இளம் பெண்கள் மீட்பு

குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சீசன் கலைக்கட்ட துவங்கியுள்ளது. சீசனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மலையும் பெய்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் சீசன் காலங்களில் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க படையெடுப்பதுண்டு. இதனால் தினமும் ஏராளமானோர் குற்றாலத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்த சீசன் காலங்களில் அங்குள்ள கடைகளில் வியாபாரமும் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உணவு பண்டங்கள், பழங்கள், அழகு பொருட்கள், விளையாட்டு பொருட்கள் என விதவிதமாக விற்பனையில் இடம் பெறும். மேலும் அவ்வப்போது பெய்யும் மழையால் மெயின் அருவி,  பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

மேலும் விடுமுறை தினங்களில்  சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிகரித்து காணப்படும்.  இதனால் கூட்டம் அலைமோதும். மேலும் குற்றாலத்தை சுற்றியுள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் வந்து தங்குவர். இந்த நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஆர்ஜிபி ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட அந்த விடுதியில்  போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3  நபர்கள் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தெரிய வந்த நிலையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (வயது 24), கோட்டயம் குதிரை சேர்ந்த ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (வயது 28) மற்றும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஆனந்த் (வயது 28) என்பது தெரிய வந்தது. 

உடனடியாக அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget