மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?

சென்னையில் இரவு நேர பணியில் ஈடுபடும் சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றங்களை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னையில், இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசார், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் வகையில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது, போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னை மாநகரக் காவல்துறையின் அறிக்கை

இரவு நேரங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில், வாகனத் தணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும், பைக் ரேஸ் நடத்தக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக் பாயிண்ட்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அவசர அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுவும் நடக்கவில்லை என்ற மழுப்பல் பதில் கூறக் கூடாது என்றும் புகார்தாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், அதிகாலை 2 - 4 மணிக்கு, வங்கிகள், ஏடிஎம்-களில் உள்ள காவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலெர்ட் செய்ய வேண்டும் எனவும், இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஏரியாக்களிலும் 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்றும், 2 பேர் தங்கும் அறையில் கூடுதல் நபர்கள் தங்கியிருந்தால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது என்றும் வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிப் பிடிக்காமல், அடுத்த செக் பாயிண்ட்டுக்கு தகவல் அளித்து அவர்களை பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
Grand Vitara Recall: 39 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் மாருதி.. க்ராண்ட் விட்டாராவில் என்ன பிரச்னை?
Grand Vitara Recall: 39 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் மாருதி.. க்ராண்ட் விட்டாராவில் என்ன பிரச்னை?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
Grand Vitara Recall: 39 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் மாருதி.. க்ராண்ட் விட்டாராவில் என்ன பிரச்னை?
Grand Vitara Recall: 39 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் மாருதி.. க்ராண்ட் விட்டாராவில் என்ன பிரச்னை?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
TN Roundup: ஸ்டாலின் வார்னிங், விஜய் மீது உதயநிதி அட்டாக், சரிந்த தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் வார்னிங், விஜய் மீது உதயநிதி அட்டாக், சரிந்த தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Maithili Thakur: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட்.. ஒரே மாதத்தில் MLA.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட மைதிலி தாகூர்!
Maithili Thakur: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட்.. ஒரே மாதத்தில் MLA.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட மைதிலி தாகூர்!
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Embed widget