மேலும் அறிய

நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு குடிபெயர்ந்தால், இத்தனை லட்சம் தொகையா? முழு விவரம்

இந்த புதிய திட்டத்தின்படி, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் வழங்கப்படும்.

ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு 1 மில்லியன் யென் வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் வழங்கப்படும்.

2019 இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்குள் 10,000 பேர் டோக்கியோவிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்வார்கள் என ஜப்பான அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, 1,184 குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு, 290 குடும்பங்களுக்கும் 2019ஆம் ஆண்டு, 71 குடும்பங்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1 மில்லியன் யென் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆதரவு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய டோக்கியோ பெருநகரப் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் ஆதரவு தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், உள்ளூர் நகராட்சிகளும் இதற்கான நிதி செலவை பிரித்துக் கொள்கின்றன.

குடும்பங்கள் உள்ளூர் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினால் கூடுதல் உதவியும் வழங்கப்படும். இருப்பினும், கிராமப்புறத்திற்கு செல்வதற்கு 1 மில்லியன் யென் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆதரவு தொகை பெற விரும்பும் குடும்பங்கள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தங்கள் புதிய வீடுகளில் வசித்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும் அல்லது புதிய வணிகத்தைத் தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவாக வசித்தவர்கள் உதவி தொகையை பெற்றால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும்.

கிராமப்புறங்களில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மக்களுக்கு அங்கு வாழ்வதற்கான பலன்கள் குறித்து விவரிக்கப்படும். அதன் ஒரு பகுதியாக, ஒடாரி கிராமத்தில் குழந்தை வளர்ப்பு திட்டத்தை எளிதாக பெறுவது குறித்து அவர்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைவாய்ப்பை தேடி செல்வதால், ஜப்பானின் கிராமப்புறங்கள் சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 

எனவே, உதவி தொகை வழங்கி பிற பகுதிகளில் மக்களை குடியேற்ற வைப்பது டோக்கியோவில் உள்ள பொது போக்குவரத்து மீதான அழுத்தத்தை குறைக்கும். மக்கள் வசிக்காத காலியாக உள்ள பகுதிகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஜப்பானில் மக்கள் தொகையும் பிறப்பு வகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், மொத்தம் 8,11,604 குழந்தைகள் பிறந்துள்ளது. 1899ஆம் ஆண்டு, மக்கள் தொகை பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பதிவான குறைந்த பிறப்பு விகிதம் இதுவாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget