மேலும் அறிய

ஏரி மதகு உடஞ்சி போச்சு... விவசாயம் கூட பண்ணமுடியல... திரும்பவும் ஊருக்குள்ள தண்ணி வரும் சார்... கண்ணீரில் கந்தாடு மக்கள்

வரும் மழைக்காலத்தில் ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளதால் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விழுப்புரம் : மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மழையின் போது எரி உடைப்பு ஏற்பட்டு மழை நீர் முழுவதும் வீணாக கடலில் கலந்தது, பின்னர் தற்காலிகமாக மணல் கொட்டி சரிசெய்தனர். ஆனால் அதற்கான நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை, ஏரியின் மதகு உடைந்து இருப்பதால் மீண்டும் மழை வந்தால் மழை நீரை சேமிக்க முடியாது, வீடுகளுக்குள் மழை நீர் புகும் ஆபாயம் உள்ளது.  

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வயல் வெளிகளில் வெள்ள நீர் புகுந்தது.

கந்தாடு ஊராட்சியில் 13 சிறு கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இதற்கு நீர் ஆதாரமாக கந்தாடு கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 5 ஆண்டுகளாக ஏரியின் கலங்கல் சேதமடைந்து ஏரியின் நீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. ஏரி பாசனமின்றி விவசாயிகள் 200 அடி ஆழம் போர்வெல் மூலம் தண்ணீரை எடுத்து விவசாயம் செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியாரும் நிலைவந்தது. இந்த நிலையில் மழை நின்றவுடன் தற்காலிகமாக மணலை கொட்டி சரி செய்தனர்.

பின்னர், மதகு சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இதனால், வரும் மழைகாலத்தில் ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளதால் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  உடைந்து போன மதகு மற்றும் சிதலமடைந்துள்ள கலங்கலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget