மேலும் அறிய

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்

பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்காமல் அதனை தொடர்ந்து இயக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் பணிமனை 2 என இரண்டு பணிமனை இயங்கி வருகிறது இந்த பணிமனையில் இருந்து பேருந்துகள் பழுது நீக்கம் செய்து விருத்தாசலம் பகுதி மற்றும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று விருதாச்சலத்தில் இருந்து டிவி புத்தூர் பாசிகுளம் கிராமத்திற்குச் சென்று 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் திரும்பி வந்துகொண்டு இருந்தது அப்படி வரும் பொழுது விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் பிரேக் பிடித்து உள்ளார். ஆனால் திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காததால் பேருந்து நிற்காமல் சாலை இறக்கத்தில் நகர தொடங்கியது, மேலும் அந்த நிற்காமல் நீண்ட தூரம் ஓடிச் சென்றது.

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்
 
அப்பொழுது ஓடிக்கொண்டு இருந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சுதாரித்து கொண்டு ஒரு சிலர் பேருந்தை விட்டு கீழே இறங்கி பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர், பின்ன அந்த பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் உதவியுடன் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தை இழுத்து பிடித்து பேருந்தின் சக்கரத்தின் அடியில் கல்லை போட்டு பேருந்தை நிறுத்தினர். பேருந்து நிற்காமல் ஓடியதால் பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்காமல் அதனை தொடர்ந்து இயக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. 
 

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்
 
இந்நிலையில் பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுதியது, மேலும் ஒரு அரசு பேருந்து சாலையில் சென்றுகொண்டு இருக்கும் பொழுதே ப்ரேக் பிடிக்காமல் சென்றது எப்படி எனவும் இவ்வாறு பேருந்து ப்ரேக் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கூட அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது எனவும், முக்கிய சாலை என்பதால் பேருந்து மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது வேகமாக வந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது, ஆகவே நகர பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் செலுத்தப்படும் பேருந்துகளை சரியான நிலையில் உள்ளதா என்பதனை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் எனவும் தற்பொழுது பள்ளிகள் இயக்கபடுதால் மாணவர்களும் அதிகம் அரசு பேருந்துகளை பயன்படுத்துவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அரசு பேருந்துகளின் நிலையினை அவ்வப்பொழுது கவனிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Gold Rate Peaks: அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Gold Rate Peaks: அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Embed widget