மேலும் அறிய

புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

கடந்த 17.08.2025 அன்று ரவி என்பவர், வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசியுள்ளார்.

புகழூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்டதற்கு தாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நடிகை அம்பிகா.

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்


கரூர் மாவட்டம், புகழூர் 4 ரோடு நாடார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (61). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். புகழூர் தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (45) திமுக கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி சபீனா புகழூர் நகராட்சி  15 வது வார்டு கவுன்சிலராக  உள்ளார்.

இந்நிலையில் கடந்த 17.08.2025 அன்று ரவி என்பவர், வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசியுள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நவாஸ்கான், அவரது மாமனார் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து ரவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அதை தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்


இதில் மயக்கம் அடைந்த ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுபாஷினி 15 வார்டு கவுன்சிலரின் கணவர் நவாஸ் கான், மாமனார் ஜான்பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது   நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் நண்பர்கள் வீட்டிற்கு வந்த நடிகை அம்பிகா இதனை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து வழக்குப்பதிவு தாமதமாக செய்யப்பட்டுள்ளது இச்சம்பவம் FIR காப்பியாக மட்டும் இருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறுகையில், 

சித்ராவின் செய்தியை சமூக வலைதளங்களில் பார்த்து வந்துள்ளேன். கடன் மற்றும் சொத்து பிரச்சனைகளுக்கும் சண்டை என்று சொன்னால் அது பெரியதாக தெரியாது. ஆனால் தண்ணீர் வரவில்லை என்று கேட்டதற்கு இப்படி செய்துள்ளார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் எப்படி நடந்து கொண்டுள்ளார்கள். இதற்கு பேசியிருக்கலாம் அதை விட்டுவிட்டு அடிப்பது தவறு மக்கள் அனைவரும் நல்லது செய்வார்கள் என்று ஓட்டு போட்டு உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது காப்பாற்ற வேண்டிய நீங்களே அவர்களை போட்டு அடித்துள்ளீர்கள்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

நான் அரசியல் ரீதியாக இங்கு பேச வரவில்லை மனிதாபிமான அடிப்படையில் சொல்கிறேன் யாராக இருந்தாலும் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும். விவேக் காமெடியில் வருவது போல் எனக்கு அவர்களை தெரியும் இவர்களை தெரியும் என்று வருவது போல் அவர்கள் சொன்னால் காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதை சொன்னதோடு தண்ணீரில் போடாமல் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். கவுன்சிலர், எம்எல்ஏ என்று நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அவர்களை உங்களது அப்பா, அம்மா ,அண்ணன், அக்கா சாணத்தில்  நின்று காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும், FIR ஒரு கதையாக போகாமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

மேலும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி சித்ரா கூறுகையில், எனது கணவர் பிரச்சனையில் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எனது கணவர் தாக்கப்பட்ட முதல் தற்போது வரை நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார.  நாம் தமிழர் கட்சியின் அரவக்குறிச்சி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாள்தோறும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget