மேலும் அறிய

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - கலெக்டர் ஆபிஸ் முற்றுகை போராட்டம்

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு பல்வேறு கிராம பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானிய கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர்.

குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 27 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - கலெக்டர் ஆபிஸ் முற்றுகை போராட்டம்

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு 

இதனை தொடர்ந்து பல்வேறு கிராம மக்கள் விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு கிராமமாக மக்களை அழைத்து கருத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பல்வேறு கிராம மக்கள், மாநகராட்சி விரிவாக்கம் திட்டத்திற்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி விரிவாக்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இதனால் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கிராம சபை கூட்டத்தின் போது மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எங்கள் கிராமத்தை இணைக்க வேண்டாம் என தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி உடன் எங்கள் கிராமத்தை இணைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - கலெக்டர் ஆபிஸ் முற்றுகை போராட்டம்

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம், எந்த சலுகையும் வேண்டாம். 

மேலும் மாடக்குடி கிராம ஊராட்சி மக்கள் கூறுகையில்..

லால்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் இன்றளவும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி விரிவாக்கத் திட்டத்தில் எங்களது கிராமத்தை இணைப்பதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர் ,இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் மாநகராட்சி உடன் எங்கள் கிராமத்தை இணைத்தால் விவசாயம் பாதிக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும், வரி உயர்வு ஏற்பட்டால் விவசாயிகளின் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், இத்தகைய செயலை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.

இதேபோன்று சோமரசன்பேட்டை பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்தில் எங்கள் ஊராட்சியை இணைக்க வேண்டாம் என கோரிக்கை மனுவை அளித்தனர். 

குறிப்பாக எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம், மாநகராட்சியின் எந்த சலுகையும் வேண்டாம்,  கிராமம் கிராமமாகவே இருக்கட்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Election Result: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று.! டஃப் ஃபைட்டில் ஆம் ஆத்மி , பாஜக
Delhi Election Result: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று.! டஃப் ஃபைட்டில் ஆம் ஆத்மி , பாஜக
Erode East By Election: இன்று வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்கில் தி.மு.க. அசத்துமா? அச்சுறுத்துமா நாம் தமிழர்?
Erode East By Election: இன்று வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்கில் தி.மு.க. அசத்துமா? அச்சுறுத்துமா நாம் தமிழர்?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
Erode East By Election Result Live: ஈரோட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை! சூரியன் உதிக்குமா? மைக் ஒலிக்குமா?
Erode East By Election Result Live: ஈரோட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை! சூரியன் உதிக்குமா? மைக் ஒலிக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPSSivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Election Result: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று.! டஃப் ஃபைட்டில் ஆம் ஆத்மி , பாஜக
Delhi Election Result: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று.! டஃப் ஃபைட்டில் ஆம் ஆத்மி , பாஜக
Erode East By Election: இன்று வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்கில் தி.மு.க. அசத்துமா? அச்சுறுத்துமா நாம் தமிழர்?
Erode East By Election: இன்று வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்கில் தி.மு.க. அசத்துமா? அச்சுறுத்துமா நாம் தமிழர்?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
Erode East By Election Result Live: ஈரோட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை! சூரியன் உதிக்குமா? மைக் ஒலிக்குமா?
Erode East By Election Result Live: ஈரோட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை! சூரியன் உதிக்குமா? மைக் ஒலிக்குமா?
Income Tax Bill: இனி எல்லாமே புதுசு தான் - புதிய வருமான வரி மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல், அடுத்து என்ன?
Income Tax Bill: இனி எல்லாமே புதுசு தான் - புதிய வருமான வரி மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல், அடுத்து என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
Embed widget