மேலும் அறிய

கங்கைகொண்டான் சிப்காட் மெகா உணவு பூங்காவில் மனைகள் குத்தகை மூலம்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு

குறைந்தபட்சம் அரை ஏக்கர் முதல் அதிகபட்சம் தொழில்முனைவோர்களின் தேவைக்கேற்ப தொழில் மனைகள் குத்தகைக்கு வழங்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் ரூ.77.02 கோடி மதிப்பீட்டில் ஒரு பெரிய அளவிலான உணவுப்பூங்கா 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வுணவுப் பூங்காவில் அடிப்படை வசதிகளான உட்சாலைகள், மின்சார வசதி, தண்ணீர் வசதி, வாகனம் நிறுத்தம் இடம், அலுவலக்கட்டிடம் மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகளான காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை (20 மெட்ரிக் டன்), சேமிப்புகிடங்கு (7500 மெட்ரிக் டன்), குளிர்பதன கிடங்கு (5000 மெட்ரிக் டன்) போன்ற வசதிகளோடு அமைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வுணவுப் பூங்காவில் தொழில் முனைவோர்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு 28 தொழில்மனைகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது காலியாக உள்ள 16 ஏக்கர் நிலத்தினை ஏக்கருக்கு ரூ.50 இலட்சம் வீதம் 94 வருடங்களுக்கு குத்தகைக்கு விடும் பொருட்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தில் (www.tansidco.tn.gov.in) 31.08.2024 முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. கங்கைகொண்டான் உணவுப்பூங்காவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறைந்தபட்சம் அரை எக்கர் முதல் அதிகபட்சம் தொழில்முனைவோர்களின் தேவைக்கேற்ப தொழில் மனைகள் குத்தகைக்கு வழங்கப்படும். இந்த உணவுப்பூங்காவில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகள், சிப்காட் / சிட்கோ கொள்கையின்படி நிலம், தேவைக்கேற்ப தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், தமிழ்நாடு உணவு பதப்படுத்தப்படும் கொள்கையின்படி முதலீட்டு மானியம், முதலீட்டு மூலதனத்திற்கு பெறப்பட்ட கடனில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் 3 சதவீத வட்டி விலக்கு, நடுத்தர முதலீட்டிற்கான சிறப்பு மானியம், தரம்பிரித்தல், சிப்பம் கட்டுதல் மற்றும் பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி, தரச்சான்றிதழ் பெறுதல் மற்றும் காப்புரிமை பதிவு செய்வதில் உதவி, போக்குவரத்து உதவி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தர பரிசோதனை ஆய்வகங்கள் போன்ற வசதிகளை பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி செயலர், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சென்னை (9442396316), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருநெல்வேலி (9443002181) ஆகியோரை தொழில்முனைவோர்கள் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget