மேலும் அறிய

Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...

சென்னை மதுரை இடையே அமைய உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே, அதாவது விரைவுச் சாலைக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலையான சென்னை மதுரை எக்ஸ்பிரஸ் வே அமைப்பதற்கான பூர்வாங்கப் பணி, அதாவது சாலை அமைப்பதற்கான முதல் பணியான அலைன்மெண்ட் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வாகன நெரிசலை குறைக்க உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள்

ஒரு காலகட்டத்தில், வெளியூர் செல்லும் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய நகரங்களை மட்டும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. கூடுதல் வாகனங்கள் செல்லும் வகையில் அகலமாகவும், 4 வழிச் சாலைகளாகவும், முக்கிய இடங்களில் மட்டுமே எக்ஸிட் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 6,805 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில், 1,677 கிலோ மீட்டர் நீள சாலை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகின்றன.

ஆனால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்களும் பெருகிவிட்டதால், நெடுஞ்சாலைகளே போதுமானதாக இல்லாமல் போய்விட்டன. அதைத் தொடர்ந்து வந்ததுதான் 6 வழித்தடங்கள் கொண்ட விரைவுச் சாலைகள். இந்தியாவில், அதிவேக சாலைகள் என அழைக்கப்படும் இந்த சாலைகள், 5,930 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் 26 இடங்களில் பசுமை வழி விரைவுச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது. சென்னையில், எண்ணூர் விரைவுச் சாலை மற்றும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைகள் உள்ளன.

சென்னை-திருச்சி-மதுரை விரைவுச் சாலை

எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவுச் சாலை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரையை இணைக்கும் பசுமைவழி விரைவுச் சாலை, ரூ.26,500 கோடி மதிப்பீட்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட உள்ளது. இந்த விரைவுச் சாலை, மதுரையில் தொடங்கி, திருச்சி உள்ளிட்ட 5 அல்லது 6 நகரங்களில் மட்டுமே எக்ஸிட்டுகள் கொண்ட சாலையாக சென்னையை வந்தடைய உள்ளது.

சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தாம்பரம் அல்லது சிங்க பெருமாள் கோயிலிலிருந்து இந்த பசுமைவழி விரைவுச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அந்த சாலை மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அலைன்மெண்ட் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சாலை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ முதல் கட்ட பணி இதுதான்.

470 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த சாலையால், மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையிலிருந்து திருச்சிக்கு 3 அல்லது அதிகபட்சமாக 4 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

 

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
Trump Warns Putin: “உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
“உக்ரைன முழுசா அடைய நினைச்சா ரஷ்யாவுக்கு வீழ்ச்சிதான்“; புதினை எச்சரித்த ட்ரம்ப்
Embed widget