மேலும் அறிய

"விவசாய முறையே மாற்றி அமைக்கப்படும்" பதஞ்சலி உணவு பூங்கா குறித்து ஆச்சார்யா பாலகிருஷ்ணா கருத்து!

நாக்பூரில் தொடங்கப்பட உள்ள உணவு பூங்காவால் நாட்டின் விவசாய முறை மாற்றி அமைக்கப்படும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள மிஹான் (நாக்பூரில் உள்ள மல்டி-மாடல் சர்வதேச சரக்கு மையம் மற்றும் விமான நிலையம்) பகுதியில் பதஞ்சலியின் 'மெகா உணவு மற்றும் மூலிகை பூங்கா' தொடங்கப்பட உள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

பதஞ்சலி உணவு பூங்கா:

இந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த திட்டம் நாட்டின் விவசாய முறையை மாற்றி அமைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பதஞ்சலி நிறுவனத்தில் தீவிரமாக இணைந்து வருகின்றனர். இந்தப் பகுதி விவசாயிகள் பல வருடங்களாகக் காத்திருந்த நாள் வந்துவிட்டது. விதர்பா என்றதும் விவசாயிகளின் துயரங்களும் அவர்கள் செய்த தற்கொலைகளும் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இந்த நிலை விரைவில் மாறும்.

பதஞ்சலி ஆலைக்கு அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படும். இந்த முழு பிராந்தியத்திலும் விவசாயிகளின் மோசமான நிலையையும் விவசாய முறையையும் மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். இன்று, இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

ஆச்சார்யா பாலகிருஷ்ணா என்ன சொன்னார்?

மேலும், சில திறமையான நபர்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், உள்ளூர் விவசாயிகளை வளப்படுத்துவதும் எங்களுக்கு முன்னுரிமை. பதஞ்சலியின் ஆலையை நிறுவுவதற்கு கணிசமான நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது.

ஏனெனில், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்தத் திட்டம் மிகவும் தாமதமானது. பிரதமர் நரேந்திர மோடியின் திறன் பயிற்சித் திட்டங்கள் என்ற கனவை நனவாக்குவதில் பதஞ்சலி பெரும் பங்காற்றியது. இதன் மூலம் நாட்டில் மனிதவளத் திறன்கள் வளர்க்கப்படுகிறது" என்றார்.

பதஞ்சலியின் இந்த ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன் பணிகள் விரிவடையும் போது, ​​இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். விரைவில் இந்த ஆலையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget