மேலும் அறிய

உச்சி வெயில் நேரத்தில் ஜில்லுன்னு இளநீர் குடிச்சா போல அறிவிப்பு திருச்சி மக்களுக்கு!!!

மிக முக்கியமான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

தஞ்சாவூர்: எப்பப்பா அந்த அறிவிப்பு... எப்பப்பா அந்த அறிவிப்பு என்று காத்திருந்த திருச்சி மக்களே... இதோ அறிவிப்பு உங்களுக்காக. திருச்சி விமான நிலையத்திலிருந்து இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவை தொடங்குது. அதில் முக்கியமாக திருச்சியிலிருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வரும் 30ம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. மற்றொன்று திருச்சி- மும்பை விமான சேவை ஆகும்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

அதிக பயணிகள் வந்து செல்கின்றனர்

மிகப்பெரிய விமான நிலையமாகவும், அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையமாக திருச்சி விளங்குகிறது. இதனால் கூடுதலாக விமான சேவையை இயக்க வேண்டும் என்று பயணிகள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் தொடர் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை வரும் 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.


உச்சி வெயில் நேரத்தில் ஜில்லுன்னு இளநீர் குடிச்சா போல அறிவிப்பு திருச்சி மக்களுக்கு!!!

யாழ்ப்பாணத்திற்கு திருச்சியிலிருந்து விமான சேவை

இலங்கை தமிழர்களின் முக்கிய வாழ்விடமாக இருந்து வரும் யாழ்ப்பாணத்திற்கு ஏராளமான மக்கள் திருச்சியிலிருந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் இயக்கி வருகிறது. 

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக விமானங்களை மட்டுமே தரையிறக்க முடியும். இதனால் ஏடிஆர் 72 ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுமா என்று பயணிகள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது எதிர்பார்த்து இருந்த அனைவருக்கும் உச்சி வெயிலில் இளநீர் குடித்தது போல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை வரும் 30-ந் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்க இருக்கிறது.

தினசரி மதியம் 12.55 மணிக்கு புறப்படுதுங்கோ!!!

திருச்சியில் இருந்து தினசரி மதியம் 12:55 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 1:55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3:50 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த வழித்தடத்தில் ஏடிஆர் 72 வகை சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன. விமான கட்டணமாக 7 ஆயிரத்து 190 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு www.goindigo.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி- மும்பைக்கு சேவையை இயக்குது

இந்நிலையில் இதுகுறித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியதாவது: கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்து இருக்கக்கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அதிகாரிகளை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து திருச்சிக்கு உள்நாட்டு போக்குவரத்து தொடர்பாக நான் கேட்டிருந்த விமான சேவைகளில் ஒன்றான திருச்சி - மும்பை நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ள அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதுபோல திருச்சி - யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை தொடங்கப்படவுள்ள அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது. இந்த இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவையும் வரும் மார்ச் 30ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கும்.

மிக முக்கியமான விமான சேவை இது

திருச்சி - யாழ்ப்பாணம் விமான போக்குவரத்து ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் தாயகத் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கும் இருபுறத் தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு மேம்படவும் இந்த விமான சேவை முக்கியமான ஒத்துழைப்பாக அமையும்.

அதுபோல திருச்சி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையோடு இணைக்கும் இந்த திருச்சி - மும்பை புதிய விமான போக்குவரத்து பலதொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும். மேலும், மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் படி இந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து- மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மற்றும் இண்டிகோ நிறுவனமும் தொடர்ந்து திருச்சிக்கு வழங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget