மேலும் அறிய

Nellai Book Fair: நெல்லையில் புத்தகத்திருவிழா .. தேதியை அறிவித்தார் ஆட்சியர் கார்த்திகேயன்!

தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நெல்லை மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது .

தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நெல்லை மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது . இதனை கொண்டாடும் விதமாகவும், இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்திடவும், இளம் தலைமுறையினரிடையே இலக்கியம், புத்தகம், கலைகள் குறித்து ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டு தோறும் இலக்கிய திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டுக்கான  இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,  பொருநை நெல்லை திருவிழா 2024- ல் இரண்டாவது பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா வருகிற 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் மற்றும் பிபிஎல் மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த இலக்கிய திருவிழாவில் தென் மாவட்டங்களின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தங்களின் இலக்கிய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பங்கேற்கின்றனர். மேலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விவாத மேடை, மற்றும் இலக்கிய வினாடி வினா போட்டிகள், தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு - பேச்சு போட்டிகள் என இலக்கியம் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏழாவது பொருநை புத்தகத் திருவிழா பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை டவுண் பொருட்காட்சி திடலில்  உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில்  இடம் பெறுகிறது.

மேலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி தினமும் சிறந்த ஆளுமைகள் பங்குபெறும் கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள், பல்வேறு அரசு துறைகளின்  சிறப்பு நிகழ்வுகள் போன்றவை நடைபெற உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் மாவட்டத்தின் தொன்மையான கைத்தொழில்கள் மற்றும் கலைகள் குறித்து அத்துறை சார்ந்த வல்லுனர்களால் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி இல்லா புத்தகத் திருவிழாவாக நடத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னதாக இலக்கிய திருவிழா குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget