Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாணியம்பாடியில், அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், வெகு தூரம் பேருந்தின் படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு அபாயகரமாக ஒடிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தை பிடிக்க அபாயகரமாக ஓடிய மாணவி
பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். இந்த நிலையில், திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து ஓடியுள்ளார். வெகு தூரம் இப்படி மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், பின்னர் ஒருவழியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நிற்காமல் சென்ற பேருந்து | பதறி அடித்து ஓடிய பள்ளி மாணவி
— ABP Nadu (@abpnadu) March 25, 2025
வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் பேருந்திற்காக காத்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.
பேருந்து நிற்காமல் சென்றதால் பதறி அடித்துக்கொண்டு பேருந்தை பின் தொடர்ந்து ஓடி ஏறி, பரீட்சைக்கு சென்றார்.#Thiruppathur… pic.twitter.com/hDpslfbh3z
இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பேருந்து ஓட்டுநருக்கு மனசாட்சியே இல்லையா என்றும், அவருடைய பெண்ணாக இருந்தால் இப்படி செய்வாரா என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி பேருந்துக்காக ஓடிய வீடியோ வைரலான நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

