மேலும் அறிய

திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழவில் கலைஞர்கள் இசை அஞ்சலி

’’இந்தாண்டு, விழாவிற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது ’’

திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 175 வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசையஞ்சலி  செலுத்தினர். தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, விழாவிற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது .


திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழவில்  கலைஞர்கள் இசை அஞ்சலி

அதன்படி, காலை 6:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, முக்கிய வீதி வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர். தொடர்ந்து விழாவினை, சபா தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.  பந்தலில், காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை தொடங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன. சரியாக, 9.00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற கீர்த்தனை பாடப்பட்டது.


திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழவில்  கலைஞர்கள் இசை அஞ்சலி

இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'லாதிஞ்சநெ ஓ மநஸே...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர். இதில், மஹதி, விசாகாஹரி, கடலுார் ஜனனி, சுசிந்தரா, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின், உபன்யாசம் நடந்தது. இரவு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.


திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழவில்  கலைஞர்கள் இசை அஞ்சலி

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைந்தளவிலான நபர்களை அனுமதிப்பட்டு இருந்தனர். திருவையாறில், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், தியாக பிரம்ம சபையில் 175வது ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, தியாகராஜர் சுவாமிகளுக்கு செய்ய கூடிய முறையான பணிகளை, கொரோனா காலத்திலும் மத்திய, மாநில அரசுகளின் கோட்டுபாடுகளுடன் முறையாக கடைபிடித்து, விழா மனநிறைவோடு நடந்துள்ளது. விழாவில், தங்களின் உடல் நலத்தையும் பாராமல், பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்துக்கொண்டது சபை மேலும் பெருமை சேர்த்துள்ளது.

அரியலுாரில் மாணவிக்கு நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது, சிறுமிக்கு நடந்த சம்பவம் அவரது வருங்காலத்தை இருளிக்கியதோடு, வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இது போன்ற நிலை இனிமேல் எப்போதும், எங்கேயும் ஏற்படக்கூடாது. உண்மை நிலையை விசாரணை செய்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். அரசு இதில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.ம.கா.,சார்பில் வலியுறுத்துகிறேன்  என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Embed widget