மேலும் அறிய

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும் - பிஆர்.பாண்டியன்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும். ஏப்ரல் 21 சட்டமன்றத்தின் கருப்பு தினமாகும்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும் என்று  பிஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தமிழ்நாட்டில் நேற்றைய சட்டமன்ற  நிகழ்வுகள் கருப்பு தினமாக அமைந்துள்ளது. குறிப்பாக நீண்ட நெடிய உலகலாவிய போராட்டத்தின் மூலம் உலகலாவிய அளவில் கொண்டுவரப்பட்டது 8 மணி நேர வேலை,8 மணி நேர ஓய்வு,8 மணி நேர உறக்கம் என்கிற உழைக்கும் வர்க்கத்தின் 8 மணிநேர வேலை உரிமைக்கான சட்டமாகும்.  அதனை மாற்றியமைக்கக்கூடிய அதிகாரம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இல்லை. இதனை முழுமையும் அறிந்த தமிழக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சுயநலத்தோடு துணை போகிற வகையில் தொழிலாளி உரிமையை பறிக்கும் அடிப்படை நோக்கத்தோடு நேற்றைய தினம் சட்டமன்றத்தில் 8 மணி நேர உரிமைக்கான சட்டத்தை பறித்து 12 மணிநேர வேலை என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் இச்சட்டம் கொண்டு வருவதின் மூலம் தமிழக அரசின் உண்மை முகம் தெளிவாகிறது. உலக வரைபடத்தில் தமிழகம் கரும் புள்ளியை பெற்றுள்ளது. இந்நிலை தொடர்வதை இனி அனுமதிக்க கூடாது. நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023  விமான நிலையங்கள் கட்டுவதற்கும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்கிற அடிப்படையில் கொண்டு வரப்பட்டிருக்கிற தமிழக அரசின் சட்ட திருத்தம் தமிழ்நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்கான மறைமுகமாக இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து வளர்ச்சி என்கிற பெயரால் விமான நிலையங்கள் அமைப்பதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுமான திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இந்த சட்டம் வழி வகுக்கும். 
 
இதன் மூலம் ஒட்டுமொத்த நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் அழிந்து போகும் பேராபத்து ஏற்படும்.வெள்ள காலங்களில் பேரழிவு ஏற்படுத்தும் பேரபாயத்திற்கு வழிவகுக்கும்.  ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் நடவடிக்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்து துணை போகும் சுயநல ஆட்சியாக மாறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக ஆட்சி தமிழக மக்கள் நலனுக்கு எதிராக மாறி வருகிறது. இச்சட்டம் தமிழக நலனுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டிருக்குமேயானால் முதலமைச்சர் தலைமையிலான பருவநிலை மாற்றம் மற்றும் பேரழிவிலிருந்து இயற்கை வளங்கள் பாதுகாப்பிற்கான உயர்மட்ட குழுவின் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதா? குழுவினுடைய அனுமதி பெறப்பட்டுள்ளதா? குழு போட்டு இயற்கையை பாதுகாப்பேன் என்று சொல்லிவிட்டு, சட்டம் போட்டு இயற்கையை அழிப்பதற்கு முற்படுவது நியாயமா? இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க முன் வர வேண்டும்.
 
இச்சட்டம் மூலம் தமிழக அரசு விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் தன் விருப்பத்திற்கு விவசாயிகளிடம் கைப்பற்றுவதற்கும், கார்ப்பரேட்டுகள் அபகரிப்பதற்கு சட்டம் போட்டு விவசாயிகளை ஒடுக்கு வதற்கும் வழி காட்டக்கூடிய கருப்பு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஹிட்லர் ஆட்சியை கேள்வி பட்டுள்ளோம். எங்கள் தலைமுறை அதனை அனுபவிக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அதைவிட கொடுமையான கொடுங்கோல் சட்டங்கள் நேற்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதின் மூலம் சட்டமன்ற  கருப்பு தினமாக அமைந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்  இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். மறுக்கும்பட்சத்தில் தமிழகத்தில் மறு சுதந்திரப் போராட்டத்தை விவசாயிகள், ஊழைக்கும் மக்கள் ஒன்றினைந்து தீவிரமான போராட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget