மேலும் அறிய

Child Marraige: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் உண்மையா..? - அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில்  தீட்சிதர்களின் குழந்தை திருமணம் தொடர்பான விசாரணையில் தற்போது திருப்புமுனையாக  திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த  சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு ஒரு சில தீட்சிதர்கள் அப்பொழுது கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக ஆளுநர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும், பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளிடம் மருத்துவர்கள் இருவிரல் பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். 


Child Marraige: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் உண்மையா..? - அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்


அதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அதன் அடிப்படையில் தலைமை செயலர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விசாரணை முடிவடைந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் அந்த அறிக்கைகள் உண்மையா என கடந்த 24 -ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர் ஆனந்த் நேரில் சிதம்பரம் வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டார். 


Child Marraige: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் உண்மையா..? - அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்


அதில் ஆளுநர் குற்றச்சாட்டு உண்மை என தெரிவித்திருந்தார். மேலும் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க பகுதிகள் தொடப்பட்டது உண்மை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே உள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் கடந்த 11-ம் தேதி சேலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செய்திகள் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விசாரணை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலே உள்ளதாக கூறினார்.

Minister Gingee Masthan: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் - தலைமை எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது எனவும், சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் நேரில் விசாரணை செய்யும் பொழுது தங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும், காவல்துறை கட்டாயத்தின் பேரில் தாங்கள் நடைபெற்றதாக கூறியதாகவும் தெரிவித்தாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  குழந்தை திருமணம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளதால் குழந்தை திருமணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் திருப்புமுணையாக அமையுமா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி... ஸ்டான்லி கல்லூரி உள்ளிட்ட 3 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; மாணவர் சேர்க்கை நடக்குமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget