மேலும் அறிய

தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு

கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இந்த கைது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. ‘

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: 

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு, தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று (ஆகஸ்ட் 13) இந்தப் போராட்டம் 13-வது நாளை எட்டியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

ஆனால், போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ‘போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம்’ எனவும், உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, அமைச்சர் கே.என். நேரு, மேயர் பிரியா ஆகியோர் மாலை நேரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பின்னர், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார், “உடனடியாக போராட்டத்தை கலைக்க வேண்டும்; இல்லையெனில் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்தார். இதனால், ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

நள்ளிரவில் கைது:

நள்ளிரவு 12 மணியளவில், சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. கைது நடவடிக்கையின்போது காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் 30 அரசு பேருந்துகளில் ஏற்றி, எழும்பூர் ஆர்.ஆர். மைதானம் மற்றும் பல்வேறு சமுதாய நல கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கைக்கு பின், ரிப்பன் மாளிகை முன் அமைந்திருந்த போராட்ட கூடாரம் முழுமையாக அகற்றப்பட்டது.

சமூக வலைதளங்களில் கண்டனம்:

அறவழியில் போராடிய தூய்மை பணியாளர்களை கைது செய்யட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

போராட்டம் பண்றவங்க நியாயமான கோரிக்கைய வச்சு, அமைதியா தான இருந்தாங்க ? இவங்கள ஏன் இப்போ ராத்திரியோட ராத்திரியா அவசர அவசரமா அப்புறப்படுத்தனும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget