மேலும் அறிய

VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?

VP Elec CP Radhakrishnan: குடியரது துணை தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் மூலம், பாஜக ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

VP Elec CP Radhakrishnan: குடியரது துணை தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் மூலம், தமிழ்நாடு தேர்தலுக்கான நடவடிக்கையை பாஜக தொடங்கியுள்ளதாம்.

வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ண அறிவிப்பு:

ஜெகதிப் தன்கரின் ராஜினாமவை தொடர்ந்து காலியான, குடியரது துணை தலைவருக்கான பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நீண்ட நாட்கள் ஆனாலும், பாஜக தலைமையிலான கூட்டணி தங்களது வேட்பாளரை அறிவிக்காமலேயே இருந்தது. இந்நிலையில் தான், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சிபி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், அவரது வெற்றியும் உறுதியாகியுள்ளது.

அரசியல் கணக்குகள்:

பாஜகவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை, குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு அரசியல் கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் ஆளுநர்களாக உள்ள ஒருவரே இந்த பதவிக்கு தேர்தெடுக்கப்படலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன. அதேநேரம், ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஒருவரை அந்த பதவிக்கு கொண்டு வரவும் அந்த அமைப்பு தீவிரம் காட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ திருப்திபடுத்தும் விதமாக சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்து, பாஜக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஸ்கெட்ச்?

வடமாநிலங்களில் பாஜக பெரும்பாலான மாநிலங்களில் நேரடியாகவோ அல்லது கூட்டணி முறையிலொ ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், தென்மாநிலங்கள் அந்த கட்சிக்கு கடும் சவாலாக உள்ளன. குறிப்பாக தமிழ்நாடு எட்டாக்கனியாவே நீடிக்கிறது. இங்கு வலுவாக காலூன்றவே எல்.முருகன், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்ட தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளதோடு, பல தமிழர்களையும் ஆளுநர்களாக நியமித்ததாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அந்த வரிசையிலேயே, தற்போது சிபி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவராக அறிவித்துள்ளதாம். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெற முடியும் என நம்புகிறதாம். குறிப்பாக கொங்கு மண்டலத்தை தனது பலமாக பார்க்கும் பாஜக, அதே பகுதியை சேர்ந்தவரை குடியரசு துணை தலைவராக்குவதன் மூலம், சட்டமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்ப முடியும் எனவும் திட்டமிட்டுள்ளதாம்.

ஆர்எஸ்எஸ்-க்கு வெற்றி?

தனிப்பெரும்பான்மையை இழந்து ஆட்சி அமைத்தது முதலே பாஜகவின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆட்சியிலும், அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை தங்களது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கவும் தீவிரம் காட்டுகிறதாம். பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் மட்டுமின்றி, புதிய குடியரசு துணை தலைவர் பதவியும் ஆர்எஸ்எஸ் பட்டியலில் இருந்துள்ளது. இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில், வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணியில் கடும் இழுபறி நிலவியுள்ளதாக தெரிகிறது. இறுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை திருப்திபடுத்தும் விதமாகவும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய நகர்வாகவும் சேர்த்து, கோவையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சிபி. ராதாகிருஷ்ணனை, குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் எதிர்பார்த்த பலனை பாஜக அறுவடை செய்யுமா? புதிய தேசிய தலைவர் தேர்விலும் இதேபோன்று ஆர்எஸ்எஸ் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget